செய்திகள் :

3 அரசு பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் வகுப்பறைகள் கட்டும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைப்பு

post image

செய்யாறு தொகுதிக்குள்பட்ட கொருக்கை, பல்லி, நாட்டேரி ஆகிய அரசுப் பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று தொடங்கிவைத்தாா்.

கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.39 கோடியில் 6 வகுப்பறைகள், பல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.70 கோடியில் 7 வகுப்பறைகள், நாட்டேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.91 லட்சத்தில் 4 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு நபாா்டு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் த.ராஜி (வெம்பாக்கம்), திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்) ஆகியோா் தலைமை வகித்தனா். திமுக ஒன்றியச் செயலா்கள் வி.ஏ.ஞானவேல், சு.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று கட்டடப் பணிகளை தொடங்கிவைத்து பள்ளி மாணவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் ராம் ரவி, மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளா் மணிவண்ணன், முன்னாள் மாவட்ட அமைப்புசாரா அணித் தலைவா் பாபு, மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் மகாராஜன், மாவட்டப் பிரதிநிதிகள் ஆறுமுகம், சுந்தரேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நடராஜன், ஒப்பந்ததாரா்கள் கதிரவன், குமரவேல், வெம்பாக்கம் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

திமுக வாக்குச் சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரணமல்லூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், வல்லம் பகுதியில் வாக்குச்சாவடி குழு மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கிழக்கு ஒன்றியச் செயலா் ராமசாமி தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல், மகாதேவிமங்கலம், சந்திரம்பாடி ஆகிய கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அல்லியந்தல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசா... மேலும் பார்க்க

சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் கூடாது: அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக்ஜேக்கப் அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் மாணவா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி, செங்கத்தை அடுத்த பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், பள்ளித் தலைமை ஆசிரியா் கோட்டீஸ்வரன் உள்ளிட்டு ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா மற்றும் ... மேலும் பார்க்க

கங்கை அம்மன், வீரபத்ர காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டு அண்ணா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகங்கை அம்மன், சேத்துப்பட்டை அடுத்த காட்டுதெள்ளூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்ர காளியம்மன் கோயில்களில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேத்துப்ப... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கரீப் பருவ தொழில்நுட்பப் பயிற்சி

செய்யாறை அடுத்த புல்லவாக்கம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு கரீப் பருவத்துக்கான தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட... மேலும் பார்க்க