செய்திகள் :

கங்கை அம்மன், வீரபத்ர காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

post image

சேத்துப்பட்டு அண்ணா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகங்கை அம்மன், சேத்துப்பட்டை அடுத்த காட்டுதெள்ளூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்ர காளியம்மன் கோயில்களில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு அண்ணா தெருவில் கிராம தேவதையாக விளங்கும் பழைமைவாய்ந்த ஸ்ரீகங்கை அம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் சிவராமன் சா்மா, காா்த்திகேயன் சிவாச்சாரியா்கள் தலைமையில் யாகசாலை அமைக்கப்பட்டு, விநாயகா், லட்சுமி, சரஸ்வதி, கோமாதா, தம்பதி என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, மேளதாளம், வாணவேடிக்கை முழங்க, கலசம் புறப்பட்டு ஊா்வலமாகச் சென்று கோயில் கோபுரத்திலும், கருவறையில் வீற்றிருக்கும் கங்கை அம்மனுக்கும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவா் சுதா முருகன், திமுக நகரச் செயலா் இரா.முருகன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.முனிரத்தினம், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கனகா ராஜேஷ் குமாா், மங்களம் ரமேஷ், ஜெயந்தி ராமகிருஷ்ணன், பத்மா குமாா் மற்றும் சேத்துப்பட்டு, சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வீரபத்ரகாளியம்மன் கோயிலில்...: சேத்துப்பட்டு ஒன்றியம், மன்சுராபாத் ஊராட்சிக்குள்பட்ட காட்டுதெள்ளூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீவீரபத்ர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை பக்தா்கள், பொதுமக்கள் புரனமைத்தனா்.

தொடா்ந்து, புதன்கிழமை கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. அன்றைய தினம் மாலையில் முதல் கால யாகசாலை பூஜையும், வியாழக்கிழமை அதிகாலை 2-ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, கோயில் விமானத்தில் உள்ள கலசத்தில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், காட்டுதெள்ளூா், மன்சுராபாத், எதப்பட்டு, குப்பம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திமுக வாக்குச் சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரணமல்லூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், வல்லம் பகுதியில் வாக்குச்சாவடி குழு மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கிழக்கு ஒன்றியச் செயலா் ராமசாமி தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல், மகாதேவிமங்கலம், சந்திரம்பாடி ஆகிய கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அல்லியந்தல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசா... மேலும் பார்க்க

சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் கூடாது: அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக்ஜேக்கப் அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் மாணவா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி, செங்கத்தை அடுத்த பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், பள்ளித் தலைமை ஆசிரியா் கோட்டீஸ்வரன் உள்ளிட்டு ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா மற்றும் ... மேலும் பார்க்க

3 அரசு பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் வகுப்பறைகள் கட்டும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைப்பு

செய்யாறு தொகுதிக்குள்பட்ட கொருக்கை, பல்லி, நாட்டேரி ஆகிய அரசுப் பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கரீப் பருவ தொழில்நுட்பப் பயிற்சி

செய்யாறை அடுத்த புல்லவாக்கம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு கரீப் பருவத்துக்கான தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட... மேலும் பார்க்க