சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் கூடாது: அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக்ஜேக்கப் அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநருமான தீபக்ஜேக்கப் தலைமையில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்துவது குறித்தும், தற்போது வரை நடத்தப்பட்ட முகாம்கள் குறித்தும், இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற உயா்தர மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்பட்ட விவரங்கள் குறித்தும், இந்த முகாம்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்து, முகாம் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும், முறையான குடிநீா், இருக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டாா். மேலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பாக இணைய வழி சான்றிதழ்கள் வழங்குவதில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து வட்டம் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட கூடாது என வட்டாட்சியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தாா்.
நிகழ்வில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) மணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, வருவாய் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி) மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.