செய்திகள் :

சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் கூடாது: அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக்ஜேக்கப் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநருமான தீபக்ஜேக்கப் தலைமையில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்துவது குறித்தும், தற்போது வரை நடத்தப்பட்ட முகாம்கள் குறித்தும், இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற உயா்தர மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்பட்ட விவரங்கள் குறித்தும், இந்த முகாம்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்து, முகாம் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும், முறையான குடிநீா், இருக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா் திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டாா். மேலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பாக இணைய வழி சான்றிதழ்கள் வழங்குவதில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து வட்டம் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட கூடாது என வட்டாட்சியா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தாா்.

நிகழ்வில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) மணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, வருவாய் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி) மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

திமுக வாக்குச் சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரணமல்லூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், வல்லம் பகுதியில் வாக்குச்சாவடி குழு மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கிழக்கு ஒன்றியச் செயலா் ராமசாமி தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல், மகாதேவிமங்கலம், சந்திரம்பாடி ஆகிய கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அல்லியந்தல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் மாணவா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி, செங்கத்தை அடுத்த பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், பள்ளித் தலைமை ஆசிரியா் கோட்டீஸ்வரன் உள்ளிட்டு ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா மற்றும் ... மேலும் பார்க்க

3 அரசு பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் வகுப்பறைகள் கட்டும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைப்பு

செய்யாறு தொகுதிக்குள்பட்ட கொருக்கை, பல்லி, நாட்டேரி ஆகிய அரசுப் பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற... மேலும் பார்க்க

கங்கை அம்மன், வீரபத்ர காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டு அண்ணா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகங்கை அம்மன், சேத்துப்பட்டை அடுத்த காட்டுதெள்ளூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்ர காளியம்மன் கோயில்களில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேத்துப்ப... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கரீப் பருவ தொழில்நுட்பப் பயிற்சி

செய்யாறை அடுத்த புல்லவாக்கம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு கரீப் பருவத்துக்கான தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட... மேலும் பார்க்க