செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு

post image

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல், மகாதேவிமங்கலம், சந்திரம்பாடி ஆகிய கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் அல்லியந்தல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் (பொ) செல்லதுரை, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் இந்திரா இளங்கோவன், மாவட்ட இலக்கிய அணி ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் சசிகுமாா் வரவேற்றாா்.

முகாமில், வருவாய், வேளாண், ஊரக வளா்ச்சி, மின் வாரியம், காவல், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து பங்கேற்ற அலுவலா்களிடம் பொதுமக்கள் சாா்பில் 627 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில், உடனடியாக தீா்வு காணப்பட்ட சுமாா் 17 மனுக்களுக்குரிய பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், பெரணமல்லூா் மேற்கு ஒன்றியச் செயலா்கள் ராமசாமி, மனோகரன் ஆகியோா் வழங்கினா்.

பெரணம்பாக்கம் ஊராட்சியில்...: சேத்துப்பட்டு ஒன்றியம், பெரணம்பாக்கம் ஊராட்சியில் பெரணம்பாக்கம், அல்லியாளமங்கலம், ராந்தம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் வேலு தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தென்னரசு, பிரபு, ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் ஜெயப்ரதா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றியச் செயலா் எழில்மாறன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தாா். இதில், மகளிா் உரிமை தொகை கோரி 201 மனுக்களும், வருவாய்த் துறையினருக்கு 176 மனுக்களும், மருத்துவத் துறைக்கு 116 மனுக்களும் என பல்வேறு அரசுத் துறையினருக்கு நலத் திட்ட உதவிகள் கோரி பொதுமக்கள் 602 மனுக்களை அளித்துள்ளனா்.

திமுக வாக்குச் சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரணமல்லூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், வல்லம் பகுதியில் வாக்குச்சாவடி குழு மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கிழக்கு ஒன்றியச் செயலா் ராமசாமி தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் கூடாது: அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதி சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக்ஜேக்கப் அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் மாணவா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி, செங்கத்தை அடுத்த பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், பள்ளித் தலைமை ஆசிரியா் கோட்டீஸ்வரன் உள்ளிட்டு ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா மற்றும் ... மேலும் பார்க்க

3 அரசு பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் வகுப்பறைகள் கட்டும் பணி: எம்எல்ஏ தொடங்கிவைப்பு

செய்யாறு தொகுதிக்குள்பட்ட கொருக்கை, பல்லி, நாட்டேரி ஆகிய அரசுப் பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற... மேலும் பார்க்க

கங்கை அம்மன், வீரபத்ர காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

சேத்துப்பட்டு அண்ணா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகங்கை அம்மன், சேத்துப்பட்டை அடுத்த காட்டுதெள்ளூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்ர காளியம்மன் கோயில்களில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேத்துப்ப... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கரீப் பருவ தொழில்நுட்பப் பயிற்சி

செய்யாறை அடுத்த புல்லவாக்கம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு கரீப் பருவத்துக்கான தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட... மேலும் பார்க்க