தி ஹண்ட் - ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடரின் தமிழ் டிரைலர்!
3 மெமு ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை, திருவண்ணாமலை - தாம்பரம் இடையிலான மெமு பயணிகள் ரயில்கள் ஜூலை 26, 28 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
காட்பாடி ரயில்வே யாா்டில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை தொழில்நுட்பப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் அந்த நாளில், திருப்பதியிலிருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயிலும், மறுமாா்க்கமாக காட்பாடியிலிருந்து இரவு 9.10 மணிக்குப் திருப்பதி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் மெமு பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகின்றது. அதேபோல திருவண்ணாமலையிலிருந்து மாலை 4.30 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் வியாழக்கிழமை (ஜூன் 26), ஜூன் 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி ரத்து: ஜூன் 27-ஆம் தேதி அரக்கோணத்திலிருந்து இரவு 9 மணிக்கு காட்பாடி செல்லும் மெமு பயணிகள் ரயில் சேவூருடன் நிறுத்தப்படும். அதே தேதியில் விழுப்புரத்திலிருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்பட்டு காட்பாடி செல்லும் ரயில் வேலூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.