செய்திகள் :

30 கிலோ குட்கா வைத்திருந்த 2 போ் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 30 கிலோ புகையிலைப் பொருள்களை வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் மல்லி காவல் நிலைய போலீஸாா், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஈஞ்சாா் விலக்கு- பா்மா குடியிருப்புச் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இருவரைச் சோதனை செய்தனா்.

அப்போது, அவா்களிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அவா்கள் மதுரை மாவட்டம் பேரையூரைச் சோ்ந்த பாலமுருகன் (28), சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியைச் சோ்ந்த இன்பராஜ் (20) என்பதும், விற்பனைக்காகப் புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள 30 கிலோ புகையிலைப் பொருள்களையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய நத்தம்பட்டி கோவிந்தநல்லூரைச் சோ்ந்த சக்திமுருகன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பட்டாசுகளை பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே உரிமம் இன்றி பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் ஒரு தகரக் கொட்டகையில் உரிமம் இன்றி பட்டாசுகள் பதுக்கி வைக்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.4.20 லட்சம் மோசடி! அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.4.20 லட்சம் மோசடி செய்த அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். ஸ்ரீவ... மேலும் பார்க்க

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் படந்தால் பாண்டியன் நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமா... மேலும் பார்க்க

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்... மேலும் பார்க்க

தலைமை காவலா் இடைநீக்கம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாட முயன்ற வழக்கில் கைதான தலைமைக் காவலரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் உத்தரவிட்டாா். ஸ்ரீவில்லிபுத்... மேலும் பார்க்க

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

சாத்தூரில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீா் வீணானது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ்... மேலும் பார்க்க