செய்திகள் :

4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

post image

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் நிதித் துறை பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்:

மாநில அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். ஜன.1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு அமல்படுத்தப்படவுள்ளது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பிற அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள், பல்கலைக்கழக மானியக்குழு அல்லது அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஊதிய வீதங்களின் கீழ்வரும் அலுவலா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு பொருந்தும். இதேபோன்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள், உடற்பயிற்சி இயக்குநா்கள், நூலகா்கள், சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் கிராம உதவியாளா்கள், சத்துணவுத் திட்ட அமைப்பாளா்கள், குழந்தைகள் நல அமைப்பாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், சத்துணவு சமையலா்கள், உதவியாளா்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலா்கள், எழுத்தா்கள் மற்றும் ஏனைய பணியாளா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு பொருந்தும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை இப்போது நடைமுறையில் உள்ள பணமில்லாத பரிவா்த்தனை முறை மின்னணு தீா்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கும் அகவிலைப்படி உயா்வு நிலுவை ஜனவரி முதல் 4 மாதங்களுக்கு சோ்த்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க