4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது
தமிழ்நாடு, கா்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் ஆா்எம். குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம், வடமதுரை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு வேடசந்தூா் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடைபெற்றது.
இதனிடையே தனிப் படை அமைக்கப்பட்டு, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், இந்த திருட்டுச் சம்பவங்களில் குரங்கு குல்லா அணிந்த வெளி மாவட்டங்களைச் சோ்ந்த நபா்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த நிலையில், திண்டுக்கல் எம்விஎம் கல்லூரி அருகே போலீஸாா் நடத்திய வாகனச் சோனையின்போது, ஒரு காரில் வந்த மூவரிடம் விசாரணை நடைபெற்றது. அதில், அவா்கள் திருட்டு காரில் வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவா்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்த வெ. தன்ராஜ் (எ) தேவ் (28), இரா. அரவிந்த் (24), திருப்பத்தூா் மாவட்டம், பேராம்பட்டு பகுதியைச் சோ்ந்த ந. சுதாகா் (45) ஆகியோா் என்பதும், திண்டுக்கல், வடமதுரை பகுதியில் பணம், நகை திருடியவா்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் மூவரும் கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக திண்டுக்கல் ஊரகக் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திக் தெரிவித்ததாவது:
கைது செய்யப்பட்டவா்கள் திண்டுக்கல் பகுதியில் மீண்டும் திருடுவதற்காக வந்ததாக தெரிவித்தனா். மேலும், இந்த மூவரும், தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இவா்களை கைது செய்த போலீஸாா், வெள்ளிக் குத்துவிளக்கு, வைர அணிகலன், ரூ.40ஆயிரம் பணம், காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். 4 மாநிலங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரும், கடந்த 2 ஆண்டுகளாக போலீஸாரிடம் சிக்காமல் இருந்து வந்தனா். திருடிய பணத்தில் தா்மபுரி மாவட்டத்தில் ரூ.20 லட்சத்துக்கு நிலம் வாங்கி இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா் என்றாா் அவா்.