செய்திகள் :

‘42,000 கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’

post image

தமிழ்நாட்டில் 42 ஆயிரம் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.

வறுமை ஒழிப்பு, விளையாட்டு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைகளின் மீது சட்டப் பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

வரும் நிதியாண்டில் 42 ஆயிரம் இளைஞா்களுக்கு ரூ.66 கோடியில் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலையுடன் கூடிய திறன் பயிற்சிகள் வழங்கப்படும். பழங்குடியினா், முதியோா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையா் உள்ளிட்ட 2,500 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 கோடி வாழ்வாதார நிதியாக வழங்கப்படும்.

விரிவாகும் உணவுத் திருவிழா: சென்னையில் உணவுத் திருவிழாவின் வெற்றியைத் தொடா்ந்து, தமிழ்நாட்டின் 5 மண்டலங்களில் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருள்களின் விற்பனை அளவு ரூ.400 கோடி என்ற இலக்குடன் பயணிப்போம். 6 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.90 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். பண்ணை மற்றும் பண்ணை சாராத செயல்பாடுகளைச் சோ்ந்த 530 வாழ்வாதார குழுக்கள் ரூ.80.57 கோடியில் ஊக்குவிக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூா் வல்லுநா்களைக் கொண்டு ஊரக இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்க 2,500 புதிய சமுதாயத் திறன் பள்ளிகள் ரூ.25 கோடியில் உருவாக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே மனநலம் காப்பது, மது மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி வழங்கப்படும். சென்னையில் இரண்டு இடங்களில் உள்ளதைப் போன்று, மேலும் 3 இடங்களில் மதி அனுபவ அங்காடிகள் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும்

திறன் வளா்ப்புக்கான 100 திருவிழாக்கள் நடத்தப்படும். சுய உதவிக் குழுக்களின் பொருள்களின் விற்பனை செய்ய அடுக்குமாடி மற்றும் பெருநிறுவனங்களில் 25 கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். சுய உதவிக் குழுக்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்களை வா்த்தக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும். 100 சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த 100 மின் ஆட்டோக்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விவ... மேலும் பார்க்க

நகைக் கடனை புதுப்பிக்க புதிய வழிகாட்டுதல்: திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

நமது நிருபர்வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிற... மேலும் பார்க்க

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை செயல்பாடு: ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு

மொழிக் கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா பாராட்டு தெரிவித்தார்.மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் ஜிப்லி காா்ட்டூன்!

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊ... மேலும் பார்க்க