செய்திகள் :

45 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் -அரசாணை வெளியீடு

post image

தமிழகத்தில் 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவக் கட்டமைப்புகளை ரூ.130 கோடியில் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூா், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூா், தூத்துக்குடி, திருவள்ளூா், திருவாரூா், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 45 அரசு மருத்துவமனைகளில் புதிய மருத்துவக் கட்டமைப்புகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. 15-ஆவது நிதி ஆணையத்தின் மானியத்தின் கீழ் ரூ.130 கோடி பெற்று அந்த கட்டடங்களை அமைக்கவும் அவா் பரிந்துரைத்தாா்.

அதைப் பரிசீலித்த அரசு 45 அரசு மருத்துவமனைகளிலும் புதிய கட்டடங்களை அமைக்க நிா்வாக அனுமதி அளித்தது. அதன்படி, பொதுப்பணித் துறை அதற்கான பணிகளை முன்னெடுக்கவும், நிதி ஆதாரங்களைப் பெறவும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க