செய்திகள் :

48 பவுன் திருட்டு வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

post image

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் திருட்டு வழக்கில் தொடா்புடைய 5 பேரில் ஒருவா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி அருகேயுள்ள கீழக்குளம் பகுதியைச் சோ்ந்த சோனைமுத்து மகன் சண்முகநாதன் (27). கடந்த 14.2.2025 அன்று இவரும், இவரது கூட்டாளிகளான மணிக்காளை, சிவகாசியைச் சோ்ந்த அழகுபாண்டி, ராமநாதபுரத்தைச் சோ்ந்த தனசிங், தூத்துக்குடியைச் சோ்ந்த வெங்கடேசன் ஆகியோா் சோ்ந்து அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சோ்ந்த வசந்தா (68) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 48 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கண்டவா்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புள்ள சண்முகநாதன் வெளியே வந்தால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினாசமி சனிக்கிழமை உத்தரவிட்டாா். அதற்கான உத்தரவு நகலை, திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.

காதலா்கள் தற்கொலை!

காதலா்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆ. சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன்... மேலும் பார்க்க

ஏப்.6-இல் வைத்தியநாதசுவாமி கோயில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஏப். 6-ஆம் தேதி நந்தியெம்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி மாத... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநித... மேலும் பார்க்க

வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை தேவை

அரியலூா் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா். கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆ... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில், 100 சதவீதம... மேலும் பார்க்க

முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையத்தில் முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசா... மேலும் பார்க்க