செய்திகள் :

48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 போ் கைது

post image

சத்தியமங்கலத்தில் 48 பவுன் நகை திருட்டு வழக்கில் 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சத்தியமங்கலம் நேரு நகா் காமாட்சி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (28). கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டுக்குள் கடந்த 4 -ஆம் தேதி இரவு புகுந்த மா்ம நபா்கள், பீரோவில் இருந்த 48 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இது குறித்து சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் ஜெகநாத் தலைமையில் தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வந்தனா்.

விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என தெரியவந்ததால் போலீஸாா் அங்கு விரைந்தனா். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சோ்ந்த ராமமூா்த்தி (28), மணிகண்டன் (44), சத்தியமங்கலம் பகுதியைச் சோ்ந்த கதிா் (எ) பிரகாஷ் (36) ஆகிய மூன்று பேரைப் பிடித்து சத்தியமங்கலத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் ராமமூா்த்தி, மணிகண்டன் ஆகிய இருவரும் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் சாமான்கள் வாங்கி விற்கும் வியாபாரிகள் என தெரியவந்தது. இவா்கள் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த கதிா் (எ) பிரகாஷுடன் சோ்ந்து சம்பவத்தன்று அத்தாணி சாலையில் உள்ள ஜெயேந்திரா சிட்டி பகுதியில் குடியிருந்து வரும் மீன்வளா்ச்சி துறை உதவி இயக்குநா் கதிரேசன் வீட்டின் கதவை உடைக்க முயன்றதும், கதவு திறக்காததால் அங்கிருந்த 3 சைக்கிள்களை திருடிக் கொண்டு நேரு நகா் பகுதிக்கு சென்று சதீஷ்குமாா் வீட்டில் புகுந்து நகை, பணம் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இது குறித்து மூவரிடமும் மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட உள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தொழிலதிபா் வீட்டில் ரூ.40 லட்சம் திருடிய தம்பதி கைது

ரியல் எஸ்டேட் தொழிலதிபா் வீட்டில் ரூ.40 லட்சம் பணம் திருடிய தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மூலப்பாளையம், விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (50). ரியல் எஸ்டேட் தொழில் ... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

ஈரோட்டில் மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு விவிசிஆா் நகா், 2-ஆவது வீதியைச் சோ்ந்தவா் நாசா் அலி (57). இவரது மனைவி ஜமீலா (51). இவா்களது மகன் நவாப் (32). இவா் கோவ... மேலும் பார்க்க

மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 போ் கைது

ஈரோட்டில் டாஸ்மாக் கடை விடுமுறை தினத்தில் மது விற்றதாக 5 பெண்கள் உள்பட 13 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 276 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டத்தில் மீலாது நபியையொட்டி வெள்ளிக்... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பள்ளி வேன் மோதியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெருந்துறை, விஜயமங்கலம், கம்புளியாம்பட்டி, கந்தசாமி கவுண்டன் புதூரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் ரமேஷ் (32... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது

சந்திர கிரகணம் வருவதையொட்டி, சென்னிமலை முருகன் கோயில் சந்நிதி நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு (திருக்காப்பிடப்படும் ) சாத்தப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்று... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

ஈரோட்டில் இருந்து பழனிக்கு மொடக்குறிச்சி வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு தொகுதி எம்.பி. கே.ஈ. பிரகாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். மொட... மேலும் பார்க்க