செய்திகள் :

5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா

post image

ஒசூர்: 5 ஆண்டுகளில் ஒசூர் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருவதாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ஒசூரில் இரண்டாம் கட்ட வளர்ச்சிக்கு பல்வேறு முதலீட்டு நிறுவனங்களைக் கொண்டு வந்து குவித்துள்ளார். இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு ஒசூருக்கு கிடைத்துள்ளது என்றார்.

ஒசூரில் சிப்காட் நண்பர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது:

இரண்டாம் கட்ட வளர்ச்சியை நோக்கி ஒசூர் முன்னேறி வருகிறது. ஒசூர் தொழில் வளர்ச்சிக்கு முன்னாள் முதல்வர் மு கருணாநிதி முதல் சிப்காட் தொடங்கிவைத்து தொழில் புரட்சியை தொடக்கி வைத்தார்.

தற்போது, ஒசூரின் இரண்டாவது கட்ட வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் மு க . ஸ்டாலின் ஒசூரில் விமான நிலையம், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை தொடக்கி வைத்து வருகிறார். முதலீடுகள் குவிந்து வருகிறது.

இதையும் படிக்க: பட்டதாரிகளுக்கு ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை!

எனவே அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். வெகுவிரைவில் டைட்டில் பார்க் நியூ அமைய உள்ளது. பெங்களூருக்கு அருகில் உள்ள ஒசூர், தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய முடியும்.

இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது என்றார்.

இந்த விழாவில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, ஒசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், கிருஷ்ணகிரி எம்எல்ஏ மதியழகன் , தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், ஒசூர் மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், இயக்குநர் செந்தில்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், ஹோஸ்டியா தலைவர் மூர்த்தி, பொருளாளர் வடிவேலு, செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க