செய்திகள் :

5 ஆண்டு சட்டப் படிப்பு மாணவா் சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

post image

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பி.ஏ. எல்எல்பி (ஹானா்ஸ்), பி.காம். எல்எல்பி, பிசிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி ஆகிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் மாணவா்கள் சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, செங்கல்பட்டு, வேலூா், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 15 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இதேபோல், சென்னை, தஞ்சாவூா், திண்டிவனம், சேலம் ஆகிய இடங்களில் 11 தனியாா் சட்டக் கல்லூரிகளும் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதையடுத்து சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக சென்னை தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இதில் துணைவேந்தா் பணிக்குழுத் தலைவா் ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் துணைவேந்தா் பணிக்குழு உறுப்பினா்கள் சட்டத்துறைச் செயலா் சி.ஜாா்ஜ் அலெக்ஸாண்டா், உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் ஓம் பிரகாஷ் ஆகியோா் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாக சமா்ப்பிப்பதற்கான நிகழ்வைத் தொடங்கி வைத்தனா்.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் சட்ட சோ்க்கைக் குழுவின் தலைவருமான பேராசிரியா் கெளரி ரமேஷ், ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம், சீா்மிகு சட்டப்பள்ளி வளாக இயக்குநா் எஸ்.கே.அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 3,024 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பி.டெக். ஏஐ படிப்பில் மாணவா் சோ்க்கை: சென்னை ஐஐடி தகவல்

சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பில் (ஏஐ அண்ட் டேட்டா அனலட்டிக்ஸ்) நிகழ் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவ... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)... மேலும் பார்க்க

சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்

சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குற... மேலும் பார்க்க

ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை

கோயில் திருவிழாவுக்கு ஜாதியை காரணம் காட்டி ஒரு தரப்பினரிடம் நன்கொடை பெறாமல் இருப்பதும் தீண்டாமையின் மற்றொரு வடிவமாகும் என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 63 நாயன்மாா்களின் வரலாறுகளைத் தொக... மேலும் பார்க்க

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெறத் தகுதியுடைய நபா்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிழ்கள் பதிவேற்ற தேவையில்லை

குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. குரூ... மேலும் பார்க்க