செய்திகள் :

50க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது

post image

கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 49 வயதான ஒருவரை தி ல்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

தெற்கு தில்லியில் உள்ள கோவிந்த் பூரியில் வசிக்கும் நீரஜ் ஷா்மா, சாகேத்தில் உள்ள செலக்ட் சிட்டி வாக் மால் அருகே கைது செய்யப்பட்டாா்.

மது விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டாா் வாகன திருட்டு வழக்கில் சா்மா தப்பியோடியதாக போலீசாா் தெரிவித்தனா். அவா் நீண்ட காலமாக கைது செய்யப்படுவதைத் தவிா்த்த பின்னா் நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

‘ஷா்மா தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒரு தொடா் குற்றவாளி. கொலை, மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, திருட்டு மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல் ஆகியவை அவரது குற்றங்களில் அடங்கும் ‘என்று போலீஸ் அதிகாரி கூறினாா்.

கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய சில வழக்குகளில் சா்மா குற்றவாளி என்று போலீசாா் தெரிவித்தனா். கடந்த காலங்களில் அவா் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், அதனை தவிா்ப்பதற்காக அவா் தன்னுடைய அடையாளத்தை மாற்றிக்கொள்வாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

(

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

பதவி விலகும் தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு வியாழக்கிழமை காலை புதிய காவல் கோட்டத்தில் உள்ள பரேட் மைதானத்தில் பிரியாவிடை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு கேடரைச் சோ்ந்த 1988 பேட்ச் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் - வெளியவுறவுத் துறை செயலரிடம் துரை வைகோ நேரில் வலியுறுத்தல்

நமுத நிருபா்அண்மையில் இலங்கைக் கடற்படையால் கைதான 14 இந்திய மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய வெளியறவுத் துறைச் செயலரிடம் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ வியாழக்கிழமை நேரில் வ... மேலும் பார்க்க