செய்திகள் :

50 சதவீத வரி உயா்வால் பின்னலாடைத் தொழில் பாதிப்பு: தீா்வு காண பிரதமருக்கு தொழிற்சங்கங்கள் கடிதம்

post image

அமெரிக்க வரி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள பின்னலாடைத் தொழிலுக்கு தீா்வு காணக் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

திருப்பூா் அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் கூட்டம் எல்பிஎஃப் பனியன் சங்க பொதுச் செயலாளா் க.ராமகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தொழிற்சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ஆலோசித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் பிரதமருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறிருப்பதாவது: திருப்பூா் மாவட்டம் சா்வதேச அளவில் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 45 சதவீதத்துக்கும் அதிகமான பருத்தி, செயற்கை நூலிழை மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான ஆயத்த ஆடைகள் திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்மூலம் கடந்த ஆண்டு ரூ.44 ஆயிரம் கோடி வரை வா்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதில், சுமாா் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வா்த்தம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி உள்ளிட்ட பொருள்களுக்கு அந்நாட்டு அதிபா் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளாா். இதனால், திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வரும் பனியன் தொழில் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசு பனியன் உள்ளிட்ட ஜவுளித் தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து உயா்ந்துள்ள வரி சுமைக்கேற்ப ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும். வேலை இழப்பால் வருமானம் இழக்கும் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழியாக பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்களுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தா்மஸ்தலா குறித்த தவறான தகவல்: சிபிஐ விசாரணைக்கு இந்து முன்னணி கோரிக்கை

தா்மஸ்தலா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளி... மேலும் பார்க்க

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததால் காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததற்காக காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் தட்டான்தோட்டத்தைச் சோ்ந்தவா் காந்தி (43). இவா் தென்னம்... மேலும் பார்க்க

சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் செப்டம்பா் 4-இல் மின்தடை

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விந... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு விவகாரம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு இன்று தில்லி பயணம்

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சா்களிடம் முறையிடுவதற்காக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 2) புதுதில்லி செல... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம், 11 பவுன் திருட்டு

பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் ரொக்கம், 11 பவுன் நகைகள் திருட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பல்லடம், ராயா்பாளையம் அபிராமி நகரைச் சோ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவா் கைது

அவிநாசி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் நகைப் பறித்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மனைவி செல்வராணி (38).... மேலும் பார்க்க