செய்திகள் :

54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!

post image

ஓப்போ நிறுவனத்தில் புதிய தயாரிப்பாக என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகமாகியுள்ளது.

மக்களைக் கவரும் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த இயர் பட்ஸ் 560mAh திறனுடன் 54 மணிநேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஓப்போ நிறுவனத்தின் தயாரிப்புகள், இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளன. இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான அம்சங்களுடன் மின்னணு சாதனங்களை தயாரித்து வருகிறது.

தற்போது புதிதாக என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் 560mAh பேட்டரி திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக 54 மணிநேரங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

  • ஒவ்வொரு (இடது / வலது) கருவியும் தனித்தனியாக 58mAh பேட்டரிகளைக் கொண்டுள்ளதால், தனித்தனியாக தொடர்ந்து 12 மணிநேரத்துக்கு பயன்படுத்தலாம்.

  • சார்ஜிங் அம்சம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 4 மணிநேரத்திற்கு பயன்படுத்தலாம்.

  • ட்ரூ வையர்லெஸ் ஸ்டீரியோவால், பேட்டரிகள் தரச் சான்றிதழ் பெற்றுள்ளன.

  • புளூடூத் 5.4 அம்சத்தின் மூலம் வேகமாக சாதனங்களுடன் இணைத்துக்கொள்ள முடியும்.

  • இயர் பட்ஸில் தொடுதிறன் மூலம் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அழைப்புகளை ஏற்பது / துண்டிப்பது, பாடல்களை மாற்றுவது என தொடுதிறன் மூலம் செய்துகொள்ளலாம்.

  • வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன.

  • இதன் விலை ரூ. 1,799. சில வங்கி கடன் அட்டைகளுக்கு ரூ.200 தள்ளுபடி உண்டு.

இதையும் படிக்க | ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ. 2,500 வரை விலை குறைய வாய்ப்பு!!

OPPO Enco Buds 3 Pro Launched in India: Price and Specs

டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்!

வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.இதுவரை இல்லாத வகையில் மிகவும் பவர்ஃபுல் ஸ்கூட்டராக வெளியாகியுள்ள என்டார்க் 150 ... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் ஜிஎஸ்டி எதிரொலி? ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகள் உயர்வு!

தொடர்ந்து 2-வது நாளாக பங்குச்சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலையில் 900 புள்ளிக... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்த நிலையில் இன்றும்(வியாழக்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க

செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் உலோகப் பங்குகள் உயர்ந்து, பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது. இதனையடுத்து டாடா ஸ்டீல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.டாட... மேலும் பார்க்க

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெர... மேலும் பார்க்க