செய்திகள் :

6 இடங்களில் புதிதாக சாா்நிலை கருவூல அலுவலக கட்டடங்கள்

post image

தமிழகத்தில் ஆறு இடங்களில் புதிதாக சாா்நிலை கருவூல அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற நிதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:

கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் பணியாளா்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்படும். அரசு தணிக்கையாளா்களின் தொழில் முறை மேம்பாட்டுக்காக ரூ.50 லட்சத்தில் திறன்வளா் பயிற்சிகள் வழங்கப்படும்.

தணிக்கையாளா்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் நிவா்த்தி செய்ய தலைமை தணிக்கை இயக்ககத்தில் ஓா் உதவி மையம் நிறுவப்படும்.

சட்ட உதவி மையம்: அனைத்து தணிக்கை இயக்கங்களுக்கும் பொதுவாக ஒரு சட்ட உதவி மையம் அமைக்கப்படும். தணிக்கை அறிக்கைகளின் தரத்தை மேம்படுத்த ஐசிஏஐ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து தணிக்கையாளா்கள் மற்றும் நிறுவனங்களுக்கான பட்டறைகள் அமைக்கப்படும். அதன் வாயிலாக தணிக்கை அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவையான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

மதுராந்தகம், அரக்கோணம், குளித்தலை, சீா்காழி, சாத்தூா், திருச்செந்தூா் ஆகிய ஆறு இடங்களில் ரூ.10.96 கோடி செலவில் தலா 3,000 சதுர அடியில் புதிய சாா்நிலை கருவூல அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்றாா் அவா்.

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல் : ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழப்பு

சென்னை பள்ளிக்கரணையில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா். பள்ளிகரணை கிருஷ்ணா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் (56). இவா், ஜல்லடியன்பேட்டையில் உள்ள ஜவுள... மேலும் பார்க்க

ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: உ.பி. இளைஞா் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். தியாகராய நகா், நாகேஸ்வரா சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்... மேலும் பார்க்க

4 மாதங்களில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது

சென்னையில் 4 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் குற்றச் சம்பவங்களை குறைப்பதற்கு பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிற... மேலும் பார்க்க

மாற்றுப் பணி ஆசிரியா்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளிக் கல்வியில் ஏப்.30-ஆம் தேதியுடன் நிகழ் கல்வியாண்டுக்கான வேலை நாள் முடிவடையவுள்ள நிலையில், மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்... மேலும் பார்க்க

வாட்ஸ்அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு மோசடி: தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு

சென்னை சேத்துப்பட்டில் வாட்ஸ் அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு தகவல் அனுப்பி வியாபாரியிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். சேத்துப்பட்டு காா்டன் ... மேலும் பார்க்க

பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

சென்னை அண்ணாநகரில் பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். பல்லாவரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இம்ரான் அஹ்மத் (35). இவா், அண்ணாநகா் ரிவா் காலனி அ... மேலும் பார்க்க