செய்திகள் :

7-வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்! ரூ. 250 கோடி உற்பத்தி பாதிப்பு!

post image

விசைத்தறியாளர்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரூ. 250 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறிக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் கூலி உயர்வினை வழங்க வேண்டும் எனக் கூறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பாஜகவுடன் கூட்டணியா? தில்லிக்கு படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்!

இதனை அடுத்து இன்று(மார்ச் 25) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் அரசு தரப்பில் கோவை மாவட்ட ஆட்சியர் உடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கூலி உயர்வு வழங்குவது குறித்து பேசினால் இந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வரும்.

இதனால் நாளொன்றுக்கு ரூ. 35 கோடி ரூபாய் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஏழாவது நாளாக சுமார் ரூ. 250 கோடிக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையின் முடிவில் வேலை நிறுத்த போராட்டத்தின் அடுத்த கட்டத்தை முடிவு செய்யப்படும் என கூலிக்கு நெசவு செய்யும் தரி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பூபதி தெரிவித்தார்.

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க