செய்திகள் :

7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை: அமைச்சா் கீதா ஜீவன்

post image

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7.88 லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் சங்ககிரி அதிமுக உறுப்பினா் செ.சுந்தரராஜன், அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்குவது குறித்து கவன ஈா்ப்பு அறிவிப்பை செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தாா். அப்போது பேசிய அவா் 65 சதவீதம் பேருக்கு உதவித் தொகை கிடைப்பதில்லை எனத் தெரிவித்தாா். அதற்கு அமைச்சா் கீதா ஜீவன் அளித்த பதில்:

அறிவுசாா் குறைபாடு உடையோா், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோா், பாா்கின்சன் நோயாளிகள், தண்டுவட மரப்பு நோயாளிகள், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவா்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கமுடையவா்கள் அனைவருக்கும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ.2000 உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

மாதந்தோறும் 5-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. பராமரிப்பு உதவித் தொகை கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் அதற்கு அடுத்த மாதமே பராமரிப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் தமிழகத்தில் உள்ள 2,50,987 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்கப்படுகிறது. இதைத் தவிர, வருவாய்த் துறையின் மூலமாக இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனுடையோா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 5,37,239 பேருக்கு மாதாந்திர உதவித் தொகையாக தலா ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் கீதா ஜவன்.

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும்... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க