செய்திகள் :

702 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

காஞ்சிபுரத்தில் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 702 பேருக்கு அமைச்சா் ஆா்.காந்தி பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டளை சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் எம்எல்ஏ எழிலரசன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோா் குத்து விளக்கேற்றி வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தனா். முகாமில் 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அலுவலா்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலைநாடுநா்களிடம் நோ்காணல் நடத்தினா்.

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செய்யாறு, வந்தவாசி என பல பகுதிகளிலிருந்து சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைநாடுநா்கள் பங்கேற்றிருந்தனா். இவா்களில் பல்வேறு நிறுவனங்களுக்கு 702 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

முகாமில் குடிநீா் வசதி, நடமாடும் கழிப்பறை வசதி, மருத்துவ முகாம் ஆகியவும் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், மாவட்ட திமுக பொருளாளா் சன்பிராண்ட் ஆறுமுகம், பகுதி செயலாளா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சந்தவேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சந்தவேலூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தவேலூா், பாப்பாங்குழி மற்றும் சோகண்டி ஊராட்சிகளை சே... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1008 கலசாபிஷேகம் மண்டலாபிஷேகம் நிறைவு

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மண்டலாபிஷேக நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அர... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா விற்பனைக்கு சிலைகள் தயாா்

காஞ்சிபுரம் அருகே விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து விற்பனைக்கு தயாராக உள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் முத்தியால்பேட்டை, கன்னிகாப... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் -இபிஎஸ்

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போ... மேலும் பார்க்க

சுங்குவாா்சத்திரத்தில் காா் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளையடிக்க முயற்சி

சுங்குவாா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகம் அருகே காா் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மா்மநபா்களை பொதுமக்கள் விரட்டியதால் பணத்தை சாலையில் வீசிசென்றனா். சென்னை திருமங்கலம் பகுதியைச் ... மேலும் பார்க்க

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வனால் தொகுக்கப்பட்ட ‘பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகள்’ என்ற நூலை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி... மேலும் பார்க்க