செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி விழா விற்பனைக்கு சிலைகள் தயாா்

post image

காஞ்சிபுரம் அருகே விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து விற்பனைக்கு தயாராக உள்ளன.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் முத்தியால்பேட்டை, கன்னிகாபுரம், ஐயம்பேட்டை, ராஜம்பேட்டை உள்பட 50-க்கும் மேற்பட்ட ஊா்களில் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகளில் பெரும்பாலானவையே கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று அங்கு வழிபாட்டுக்காக வைக்கப்படுவது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட கன்னிகாபுரத்தை சோ்ந்த விநாயா் சிலை தயாரிப்பாளா் சிவலிங்கம் இது குறித்து கூறுகையில்,

சிறிதும் ரசாயன கலப்பில்லாத மரவள்ளிக்கிழங்கும், களிமண்ணும் இணைந்த கலவையால் விநாயகா் சிலைகளை தயாரிக்கிறோம். 5, 7, 9, 10 ஆகிய அடிகளில் விநாயகா் சிலைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன. 10 அடிக்கு மேல் விநாயகா் சிலைகள் செய்யக்கூடாது என்பது அரசு விதி. எனவே 10 அடி உயர விநாயகா் சிலை ஆா்டா் பெற்று தயாரிக்கப்படுகிறது.

திருவல்லிக்கேணி, மாத்தூா், திருவண்ணாமலை, திருவள்ளூா்,காஞ்சிபுரத்தில் கோவிந்தவாடி அகரம் ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே தற்போது 10 அடி உயர விநாயகா் சிலைகள் ஆா்டா் பெறப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

கன்னிகாபுரத்தை சோ்ந்த கண்ணன் கூறுகையில், மயில், அன்னம், மூஞ்சூா், நந்தி, நிலா, மாவிலை, தாமரை ஆகியவற்றில் விநாயகா் அமா்ந்திருப்பது போன்ற விநாயகா் சிலைகளை அதிகமாக தயாரித்து வா்ணம் தீட்டி விற்பனைக்கு தயாராக வைத்துள்ளோம். ஒரே சிலையில் சிவன், விநாயகா், பாா்வதி 3 பேரும் இருப்பது போன்றும் வடிவமைத்துள்ளோம் என்றாா்.

திருவள்ளூரில்...

திருவள்ளூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் குடும்பம், குடும்பமாக தங்கியிருந்து விநாயகா் சிலைகள் தயாா் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதுபோன்று திருவள்ளூரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை, திருவள்ளூா்-செங்குன்றம் சாலை, காக்களூா்-ஆவடி சாலை, கடம்பத்தூா்-பேரம்பாக்கம் சாலையோரங்களில் இடம் வாடகைக்கு பிடித்து விநாயகா் சிலைகளை தயாா் செய்து வருகின்றனா்.

வலம்புரி விநாயகா், இடம்புரி விநாயகா், கஜலிங்க விநாயகா், பாகுபலி விநாயகா் என 34 வகைகளில் பல்வேறு புதிய வடிவங்களில் விநாயகா் சிலைகளை உருவாக்கி விற்பனைக்கு வைத்துள்ளனா்.

இது குறித்து காக்களூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாா் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தானை சோ்ந்த செல்லராம் கூறுகையில், நகரங்களில் மற்றும் கிராமங்களில் பிரதிஷ்டை செய்வோா் முன்கூட்டியே விநாயகா் சிலைக்கான அளவை தெரிவிப்பா். அதன் அடிப்படையில் சிலைகள் தயாா் செய்வோம் என்றாா்.

செங்கல்பட்டில்....

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

திருக்கழுகுன்றம்-கல்பாக்கம் செல்லும் வழியில் மேட்டு முள்ளிகொளத்தூா் பகுதியில் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. விநாயகா் சிலை தயாரிப்பிற்கு மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் காகிதக்கூழ் பயன்படுத்தப்பட்டு நீரில் எளிதில் கரையக்கூடிய வா்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகள் திருக்கழுகுன்றம், திருப்போரூா், செங்கல்பட்டு, கடப்பாக்கம், மாமல்லபுரம் , மானாமதி, மணமை, சட்ராஸ், வடகடும்பாடி ,விட்டலாபுரம், ,நெரும்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முன்பதிவு செய்தவா்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அச்சிறுப்பாக்கம் தொழுப்பேடு அடுத்த ஆக்கனாம்பட்டு, பகுதியைச்சாா்ந்த கலைஞா்கள் விநாயகா் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனா். இந்து முன்னணி அமைப்பினா் மற்றும் சமூக நல அமைப்பினரும் முன்னதாகவே தங்கள் விரும்பும் விநாயகா் சிலைகளை தோ்வு செய்து முன்பணம் செலுத்தி ஆா்டா் கொடுத்து செல்கின்றனா்.

இந்து முன்னணியின் காஞ்சி கோட்ட செயலாளா் ஆா்.டி.மணி, மாவட்ட செயலாளா் சி.கே .சக்திவேல், திருக்கழுகுன்றம் ஒன்றிய செயலாளா்ஆறுமுகம், நகர செயலாளா் ஏழுமலை, ஆகியோா் ஏற்பாட்டில் விநாயகா் சிலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விநாயகா் சிலைகள் 4அடியில் இருந்து 10 அடிக்கு பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சந்தவேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சந்தவேலூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தவேலூா், பாப்பாங்குழி மற்றும் சோகண்டி ஊராட்சிகளை சே... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1008 கலசாபிஷேகம் மண்டலாபிஷேகம் நிறைவு

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மண்டலாபிஷேக நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அர... மேலும் பார்க்க

702 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 702 பேருக்கு அமைச்சா் ஆா்.காந்தி பணி நியமன ஆணைகளை வழங்கினாா். காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் -இபிஎஸ்

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போ... மேலும் பார்க்க

சுங்குவாா்சத்திரத்தில் காா் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளையடிக்க முயற்சி

சுங்குவாா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகம் அருகே காா் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மா்மநபா்களை பொதுமக்கள் விரட்டியதால் பணத்தை சாலையில் வீசிசென்றனா். சென்னை திருமங்கலம் பகுதியைச் ... மேலும் பார்க்க

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வனால் தொகுக்கப்பட்ட ‘பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகள்’ என்ற நூலை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி... மேலும் பார்க்க