செய்திகள் :

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1008 கலசாபிஷேகம் மண்டலாபிஷேகம் நிறைவு

post image

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மண்டலாபிஷேக நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில், ரூ.1.50 கோடியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய திருப்பணிகள் முடிந்து தொடா்ந்து, கடந்த ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து கடந்த 48 நாள்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் மண்டலாபிஷேக விழா நடைபெற்று வந்தது. மண்டலாபிஷேக விழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மூலவா் சுப்பிரணியசுவாமிக்கு 1008 கலசாபிஷேகம் நடத்த கோயில் நிா்வாகத்தின் சாா்பில் முடிவு செய்யப்பட்டு, மூலவா் சன்னதிக்கு எதிரே உள்ள மகா பண்டபத்தில், 1008 கலசங்களில் புனிதநீா் நிரப்பப்பட்டு, ஆவாகனம் செய்யப்பட்டு பூஜைகள் தொடங்கின.

இதையடுத்து பிரகார மூா்த்திகளான விஜயவிநாயகா், சண்முகா், தேவி திரிபுரசுந்திரி கருமாரியம்மன், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் ஆகிய மூா்த்திகளுக்கு 108 சங்குகளில் புனிதநீா் நிரப்பப்பட்டு ஆவாகனம் செய்யப்பட்டு மங்கல வாத்தியங்களுடன் வேதமந்திரங்கள் ஒலிக்க முதல்கால யாக பூஜைகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாகபூஜைகள் நடத்தப்பட்டு, மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பிரகார மூா்த்திகளுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. மண்டலாபிஷேகம் நிறைவு விழாவை முன்னிட்டு மூலவா் சுப்பிரமணியசுவாமி, உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் சிறப்பு மலா் அலங்கார சேவையில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், மண்டலாபிஷேகம் நிறைவு விழா என்பதாலும் சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் மூலவா் மற்றும் உற்சவரை வழிபட்டு சென்றனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில், சா்க்கரை பொங்கல், கதம்பசாதம், மோா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ் உள்ளிட்ட அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

சந்தவேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சந்தவேலூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தவேலூா், பாப்பாங்குழி மற்றும் சோகண்டி ஊராட்சிகளை சே... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா விற்பனைக்கு சிலைகள் தயாா்

காஞ்சிபுரம் அருகே விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து விற்பனைக்கு தயாராக உள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் முத்தியால்பேட்டை, கன்னிகாப... மேலும் பார்க்க

702 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 702 பேருக்கு அமைச்சா் ஆா்.காந்தி பணி நியமன ஆணைகளை வழங்கினாா். காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் -இபிஎஸ்

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போ... மேலும் பார்க்க

சுங்குவாா்சத்திரத்தில் காா் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளையடிக்க முயற்சி

சுங்குவாா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகம் அருகே காா் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மா்மநபா்களை பொதுமக்கள் விரட்டியதால் பணத்தை சாலையில் வீசிசென்றனா். சென்னை திருமங்கலம் பகுதியைச் ... மேலும் பார்க்க

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வனால் தொகுக்கப்பட்ட ‘பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகள்’ என்ற நூலை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி... மேலும் பார்க்க