செய்திகள் :

75 வயதில் ஓய்வுபெற வேண்டும்! பிரதமர் மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் சூசகம்?

post image

அரசியலில் இருப்பவர்களுக்கு 75 வயதானால், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது பாஜகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலத்தின் புணே மாவட்டத்தில், புதன்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உங்களுக்கு 75 வயது ஆகப்போகிறது என்றால், மற்றவர்களுக்கு நீங்கள் வழிவிட வேண்டிய நேரம் இது என்று அர்த்தம் என்று தெரிவித்தார்.

மோகன் பகவத்துக்கு வருகிற செப்டம்பர் மாதத்துடன் 75 வயதாகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதே மாதத்தில்தான் 75 வயதைத் தொடவுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை குறிப்பிட்டுத்தான் மோகன் பகவத்தின் கருத்து தெரிவிக்கிறாரா? என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஊடகங்களில் இணையவாசிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மோகன் பகவத்தின் கூற்றைக் குறிப்பிட்டுப் பேசிய சிவசேனை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், ``எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் முதலான தலைவர்களுக்கு 75 வயதானபோது, அவர்களை ஓய்வுபெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். ஆனால், அதே விதியை தனக்கும் பிரதமர் மோடி பயன்படுத்துகிறாரா என்பதைப் பார்ப்போம்" என்று கூறினார்.

இருப்பினும், பாஜகவின் சின்னமாகவும் மிகவும் பிரபலமான தலைவராகவும் பிரதமர் மோடி இருப்பதால், அவரின் ஓய்வு என்பது கணிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

பாஜகவில் 75 வயதான ஒருவருக்கு ஓய்வு அளித்துவரும் வழக்கம் கொண்டிருந்தாலும், 2019-ல் கர்நாடக முதல்வராகப் பதவியேற்றபோது பி.எஸ். எடியூரப்பாவின் வயது 76.

இதையும் படிக்க:கைது செய்யப்பட வேண்டிய நெதன்யாகுவுக்கு பாதுகாப்பு ஏன்? ஐ.நா. நிருபர் கேள்வி!

Mohan Bhagwat signalling to PM Modi?

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க