செய்திகள் :

75 வயதில் ஓய்வுபெற வேண்டும்! பிரதமர் மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் சூசகம்?

post image

அரசியலில் இருப்பவர்களுக்கு 75 வயதானால், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது பாஜகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலத்தின் புணே மாவட்டத்தில், புதன்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உங்களுக்கு 75 வயது ஆகப்போகிறது என்றால், மற்றவர்களுக்கு நீங்கள் வழிவிட வேண்டிய நேரம் இது என்று அர்த்தம் என்று தெரிவித்தார்.

மோகன் பகவத்துக்கு வருகிற செப்டம்பர் மாதத்துடன் 75 வயதாகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதே மாதத்தில்தான் 75 வயதைத் தொடவுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை குறிப்பிட்டுத்தான் மோகன் பகவத்தின் கருத்து தெரிவிக்கிறாரா? என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஊடகங்களில் இணையவாசிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மோகன் பகவத்தின் கூற்றைக் குறிப்பிட்டுப் பேசிய சிவசேனை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், ``எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் முதலான தலைவர்களுக்கு 75 வயதானபோது, அவர்களை ஓய்வுபெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். ஆனால், அதே விதியை தனக்கும் பிரதமர் மோடி பயன்படுத்துகிறாரா என்பதைப் பார்ப்போம்" என்று கூறினார்.

இருப்பினும், பாஜகவின் சின்னமாகவும் மிகவும் பிரபலமான தலைவராகவும் பிரதமர் மோடி இருப்பதால், அவரின் ஓய்வு என்பது கணிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

பாஜகவில் 75 வயதான ஒருவருக்கு ஓய்வு அளித்துவரும் வழக்கம் கொண்டிருந்தாலும், 2019-ல் கர்நாடக முதல்வராகப் பதவியேற்றபோது பி.எஸ். எடியூரப்பாவின் வயது 76.

இதையும் படிக்க:கைது செய்யப்பட வேண்டிய நெதன்யாகுவுக்கு பாதுகாப்பு ஏன்? ஐ.நா. நிருபர் கேள்வி!

Mohan Bhagwat signalling to PM Modi?

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க