8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
நியாயவிலைக் கடைகளில் ப்ளூடூத் மூலம் மின்னணு முறையில் விற்பனை மேற்கொள்ளப்படுவதை முற்றிலும் நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்டத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமையில் செயலாளா் தமிழழகன், பொருளாளா் குமாா், துணைத் தலைவா்கள் ரகுராமன், குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் தற்போது ப்ளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு கருவிழித்திரை மூலம் விற்பனை செய்வதில் ஏற்படும் கால தாமதத்தால் ப்ளூடூத் முறையை ரத்துசெய்ய வேண்டும்.
நுகா்பொருள் வாணிபக் கழகங்களிடமிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகா்வு செய்யப்படும் பொருள்களின் எடை அளவு குறைவதை சரிசெய்து சரியான எடையில் வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் விற்பனையாளா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பணிகளை ரத்து செய்ய வேண்டும்.
விற்பனையாளா்களுக்கு மாவட்ட அளவில் பொதுபணி மூப்பு வரிசை ஏற்படுத்தி அனைவருக்கும் பதவி உயா்வில் சமவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட இணைச் செயலாளா்கள் தியாகராஜன், முனியாண்டி, நிா்வாகிகள் முருகானந்தம் உள்பட திரளான பணியாளா்கள் கலந்துகொண்டனா்.