செய்திகள் :

8 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா கருண் நாயர்?

post image

இந்திய அணி வீரர் கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் இன்று (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம் பெற்றார். பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள கருண் நாயர் 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.

வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா?

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கருண் நாயர் அறிமுகமானார். அவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமை அவரைச் சேரும். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்காக விளையாடி இருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் கருண் நாயர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த அவருக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்துகளை பலரும் முன்வைத்தனர். இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அணியிலும் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்ட கருண் நாயர், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்காக விளையாடவுள்ளது குறித்து கருண் நாயர் பேசியதாவது: வாழ்க்கை ஒரு முழு வட்டமாக மாறியுள்ளது. ஏனெனில், இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியிலிருந்து வெளியேறினேன். தற்போது மீண்டும் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளேன்.

இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனபோது, மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என விரும்பினேன். என்னுடைய அந்த எண்ணம் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்தது. தினமும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்ற என்னுடைய நம்பிக்கை உண்மையாகியுள்ளது என்றார்.

இதையும் படிக்க: அறிமுகப் போட்டியில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்த சாய் சுதர்சன்!

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரிலிருந்து டெம்பா பவுமா விலகல்; அணியின் கேப்டன் யார்?

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விள... மேலும் பார்க்க

ஜெய்ஸ்வால் சதம், ஷுப்மன் கில் அரைசதம்; இந்தியா வலுவான தொடக்கம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான தொடக்கத்தைத் தந்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் இன்று (ஜூன் 20) தொடங்கியது. ... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்த சாய் சுதர்சன்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று (... மேலும் பார்க்க

அனுபவமற்ற இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும்: முன்னாள் வீரர்கள்

இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளு... மேலும் பார்க்க

இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் வெற்றிகரமாக செயல்படுவார்: அஜிங்க்யா ரஹானே

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்படுவார் என அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! தமிழன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய அணி விவரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன்... மேலும் பார்க்க