செய்திகள் :

8 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையைச் சேர்க்க உத்தரவு!

post image

தேசிய கல்விக் கொள்கையின் படி அனைத்துப் பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும், 8 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையைச் சேர்க்கவும் அதிகாரிகளுக்கு ஹரியானா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால், அதை போக்கும் விதமாக ஆசிரியர் நியமனம் தொடர்பான ஒரு விரிவான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று முதல்வர் சைனி உத்தரவிட்டார்.

ஹரியானாவில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்த அவர் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அது மட்டுமின்றி மாணவர்களுக்கு ஒழுக்கம், தர்க்கநெறிகள் குறித்த சிந்தனையை வளர்க்க 8 வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஹரியானா அரசு குறிப்பிட்ட அளவில் மாதிரி சமஸ்கிருதப் பள்ளிகளை நிறுவியுள்ளது. அவை சிபிஎஸ்இ கல்வியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியுடன் கணிதம் மற்றும் அறிவியலையும் கற்பிக்கும் விதமாக இயங்குகின்றன. சமஸ்கிருதப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேவை மற்றும் போட்டி அதிகரித்து வருவதால், சமஸ்கிருதப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்தார்.

தில்லி ஜாட் இன மக்களுக்கு பாஜக துரோகம்: கேஜரிவால்

இடஒதுக்கீடு விவகாரத்தில் தில்லி ஜாட் இனத்தவர்களுக்கு பாஜக துரோகம் இழைப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். வரும் பிப்ரவரி 5-ல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெ... மேலும் பார்க்க

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 18 ஆண்டுகள் சிறையில் இருந்த இருவர் நிரபராதிகள் என வாதம்!

மும்பையில், கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளூர் பயணிகள் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர் நிரபராதிகள், 18 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள் என உயர்நீதிமன்றமன்றத்தில் அறிக்கை தாக்க... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் சுரங்கப்பாதையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சோனாமார்க்கில் புதிதாக கட்டப்பட்ட இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அ... மேலும் பார்க்க

சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு- காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்ட சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் வருவதையொட்டி பாது... மேலும் பார்க்க

கேரளம்: சுயேச்சை எம்எல்ஏ அன்வர் ராஜிநாமா!

கேரளத்தில் சுயேச்சை எம்எல்ஏ அன்வர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடசாரி ஜனநாயக முன்னணியிலிருந்து பிரிந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பி.வி.அன்வர் தனத... மேலும் பார்க்க

கடும் குளிர்: ராஜஸ்தானில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில்... மேலும் பார்க்க