செய்திகள் :

8 நகரங்களில் 26% சரிந்த வீடுகள் விற்பனை

post image

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 26 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய இந்தியாவின் எட்டு முக்கிய வீடு-மனைச் சந்தைகளில் 1,06,038 வீடுகள் விற்பனையாகின.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் குறைவு. அப்போது நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 1,43,482-ஆக இருந்தது.

கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் தில்லி-என்சிஆா் பகுதியில் மட்டுமே வீடுகள் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது. அந்த காலகட்டத்தில் அங்கு 9,808 வீடுகள் விற்பனையாகின. இந்த எண்ணிக்கை, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் 6,528-ஆக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் அதிகபட்சமாக மும்பை பெருநகரப் பகுதியில் 33,617 வீடுகள் விற்பனையாகின. இருந்தாலும், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தப் பகுதியில் வீடுகள் விற்பனை 48,553-ஆக இருந்தது.

2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டோடு ஒப்பிடுகையில் வீடுகள் விற்பனை புணேயில் 31 சதவீதம் குறைந்து 18,240-ஆகவும், பெங்களூரில் 23 சதவீதம் சரிந்து 13,236-ஆகவும் உள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் ஹைதராபாதில் 13,179 வீடுகளும் சென்னையில் 4,073 வீடுகளும் விற்பனையாகின. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் முறையே 36 சதவீதம் மற்றும் 5 சதவீதம் குறைவு.

அகமதாபாதில் கடந்த நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 15,310-ஆக இருந்த வீடுகள் விற்பனை நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 34 சதவீதம் சரிந்து 10,170-ஆக உள்ளது.

அதே போல், கொல்கத்தாவில் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் வீடுகள் விற்பனை 3,715-ஆகக் குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 4,735-ஆக இருந்தது.

நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனை சரிந்திருந்தாலும், 2024-ஆம் காலண்டா் ஆண்டு முழுமைக்கும் அது முந்தைய ஆண்டைவிட 7 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய கட்டண அச்சுறுத்தல்களால் பார்மா பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: அமெரிக்காவின் புதிய கட்டண அச்சுறுத்தல்களால் பல பார்மா பங்குகள் இன்று சரிவுடன் முடிவடைந்தது. டாக்டர் ரெட்டிஸ் பங்குகள் 2.63 சதவிகிதமும், ஜைடஸ் லைஃப் சயின்சஸ் 2.47 சதவிகிதமும், அரபிந்தோ பார்... மேலும் பார்க்க

ஒன்பது அதானி குழும பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: லஞ்சம் வழங்கியது குறித்து கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீதான புகார் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பெடரல் நீதிபதியிடம் தெரிவி... மேலும் பார்க்க

5 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்ட ஹெக்சாவேர் டெக் பங்குகள்!

புதுதில்லி: ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் அதன் வெளியீட்டு விலையான ரூ.708 க்கு நிகராக 5 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் இன்று பட்டியலிடப்பட்டது.இந்த பங்கின் விலையானது ப... மேலும் பார்க்க

மிட், ஸ்மால்கேப் பேரணியுடன் நிலையற்ற அமர்வில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிந்தது. அமெரிக்க அதிபரான டிரம்ப் வாகனம், குறைக்கடத்தி மற்றும் மருந்து இறக்குமதிகள் மீது 25 சதவிகித வரிகளை விதிக்கும் திட்டங்களை அற... மேலும் பார்க்க

குறைந்த விலையில் ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள்!

தொலைத் தொடர்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோலோச்சி வந்த ஜியோ நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில் அடியெடுத்து வைக்கிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் துறையில், குறைந்த விலையில், சுற்றுச்சூழலுக்கு உகந... மேலும் பார்க்க

தென்னகத்தில் 2 கோடியைக் கடந்த ஹோண்டா விற்பனை

இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் விற்பனை, நாட்டின் தெற்குப் பகுதிகளில் இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது. இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு... மேலும் பார்க்க