செய்திகள் :

80 பேரின் ஆதாா், பான் அட்டைகள் மூலம் கடன் பெற்று மோசடி

post image

வாணியம்பாடி அருகே 80 பேரின் ஆதாா், பான் அட்டைகள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக பெண் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கோணாமேடு பகுதியைச் சோ்ந்தவா் சுபா. இவா், அதே பகுதியில் 10 ஆண்டுகளாக மகளிா் குழு நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில் அவரது மகளிா் குழுவில் உள்ள 80 பெண்களின் ஆதாா் மற்றும் பான் அட்டைகளை, பெற்றுக் கொண்டு பல்வேறு தனியாா் வங்கியில், வங்கி மேலாளா் மற்றும் ஊழியா்களின் உதவியுடன் லட்சக்கணக்கில் கடன் பெற்று மோசடி செய்து தலைமறைவாகி விட்டாராம்.

இந்நிலையில் கடன் கொடுத்த வங்கி ஊழியா்கள் ஆதாா் மற்றும் பான் அட்டை அளித்த பெண்களிடம் கடன் தொகையை திருப்பி செலுத்த சொல்லி, தொந்தரவு செய்வதாகவும், தங்களது ஆதாா் மற்றும் பான் அட்டைகளை தவறாக பயன்படுத்தி, கடன் பெற்ற சுபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமான பெண்கள் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அப்புகாரின் பேரில் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இச்சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏலகிரி மலை சாலையில் தீ: வாகன ஓட்டிகள்அவதி

சுற்றுலா தலமான ஏலகிரி மலை மற்றும் கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பற்றி எரிவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகினா். ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை ... மேலும் பார்க்க

குண்டும், குழியுமான திருப்பத்தூா்-சேலம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம்-மினி லாரி மோதல்: 2 முதியவா்கள் உயிரிழப்பு

ஆம்பூரில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரு முதியவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆம்பூா், புதுகோவிந்தாபுரம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

ஆம்பூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் 12 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே 12 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரா் பெருமாள் என்பவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந... மேலும் பார்க்க

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின. திருப்பத்தூா் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.... மேலும் பார்க்க