செய்திகள் :

Adani மகன் `ஜீத் அதானி' பெயரில் போலி 'வரன் கணக்கு' -ஷாக் ஆன shaadi.com CEO

post image

சமீபத்தில் ஷார்க் டேன்க் இந்தியா நிகழ்ச்சியில் தோன்றிய அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, அவரது வருங்கால மனைவியான திவா ஷாவை எப்படிச் சந்தித்தார் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

அதானி ஏர்போர்ட் இயக்குநரான ஜீத் அதானி வரன் தேடும் தளமான ஷாதி.காம் CEO அனுபம் மிட்டல்லுக்கு அளித்த பேட்டியில், ஜீத்தின் நண்பர்கள் போலியாக ஷாதி டாட் காமில் அவர் பெயரில் கணக்கு தொடங்கியதாகவும் அதனை அனுபம் நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பிப்ரவரி 7ம் தேதி, அஹமதாபாத்தில் ஜீத் அதானி - திவா ஷா திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணம் பெரும் ஆடம்பரங்கள் இல்லாமல் எளிமையாக நடைபெறும் என கௌதம் அதானி தெரிவித்திருந்தார்.

Jeet Adani

ஷார்க் டேக்ன் நிகழ்ச்சியில், ஜீத் அதானி தனக்கு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில் முயற்சிகளில் இருக்கும் ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். குறிப்பாக மாற்று திறனாளிகளின் வாழ்க்கை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.

மாற்று திறனாளிகளுக்காக பணியாற்ற விருப்பம்!

ஜீத்தின் பாட்டி, சிறுவயதில் அவரை முதியோர் இல்லங்கள் மற்றும் அனாதை ஆஸ்ரமங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் கொண்டிருந்ததாகவும், அதன் மூலம் இத்தகைய விழுமியங்கள் தனக்குள் உருவானதாகவும் ஜீத் அதானி தெரிவித்துள்ளார். மேலும் அவர் மும்பையின் மிட்டி கபேவைவுக்குச் சென்றபோது அங்கிருந்த மாற்றுத் திறனாளி தொழிலாளர்களின் உத்வேகம் தன்னை ஈர்த்ததாகவும் தெரிவித்தார்.

Adani Group அதன் தொழிலாளர்களில் 5% அளவுக்கு மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதை நோக்கி செயல்பட்டு வருவதாகவும் பேசினார் ஜீத் அதானி.

Adani Foundation

யார் இந்த திவா ஷா?

ஜீத் அதானி ஒரு குடும்ப நண்பர் மூலமாக திவா ஷாவை சந்தித்ததாகக் கூறினார். திவா, ஜெய்மின் ஷா என்ற வைர வியாபாரியின் மகள். 2023-ம் ஆண்டு திவா மற்றும் ஜீத்துக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது அதானி அறக்கட்டளையின் மாற்று திறனாளிகள் பிரிவில் திவா ஷா பணியாற்றுகிறார்.  

போலி கணக்கு!

மேலும் அவர் 6 அல்லது 7-ம் வகுப்பு படிக்கும்போது உடனிருந்த நண்பர்கள் குறும்பு செய்யும் விதமாக ஜீத் அதானி என்ற பெயரில் ஷாதி டாட் காமில் கணக்கு தொடங்கியதாகக் கூறினார். "அந்த கணக்கு யாருடைய ஈ-மெயிலில், மொபைல் நம்பரில் தொடங்கப்பட்டது என்பது எனக்கு துளியும் நினைவில்லை" எனக் கூறியவர். அந்த போலி கணக்கை நீக்குமாறு ஷாதி டாட் காம் சி.இ.ஓ மிட்டலிடம் கேட்டுக்கொண்டார்.

வழுக்கை தலையுடன் திருமணம் செய்த மணப்பெண்... இணையவாசிகளை கவர்ந்த Emotional Video!

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களை செய்வார்கள். அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கு... மேலும் பார்க்க

Japan: வேண்டுமென்றே தவறு செய்து, மீண்டும் மீண்டும் ஜெயிலுக்கு போகும் முதியவர்கள்! - பின்னணி என்ன?

ஜப்பானில் வசிக்கும் வயதானவர்கள் வேண்டுமென்றே குற்றங்களைச் செய்துவிட்டு சிறைகளில் வாழ்வதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஜப்பானில் டோக்கியோவிற்கு வடக்கே பெண்க... மேலும் பார்க்க

`உப்புமாவுக்கு பதில் பிரியாணி தரணும்'- சிறுவனின் கோரிக்கையும் கேரள அரசின் பதிலும்

அங்கன்வாடியில் உப்புமாவிற்கு பதில் பிரியாணியும் சிக்கனும் வழங்க வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதை கேரளா அரசு பரிசீலனை செய்வதாகத் தெரிவித்திருக்கிறது.கேரளாவில் அங்கன்... மேலும் பார்க்க

Divorce Temple: திருமண உறவை முறித்து கொள்ள தம்பதிகள் செல்லும் `விவாகரத்து கோயில்'- எங்கே இருக்கிறது?

கோயிலுக்குச் சென்றால் திருமணம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு கோயிலுக்குச் சென்றால் விவாகரத்து நடக்குமாம். ஜப்பானில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு "விவாகரத்து கோயில்" என்று பெயர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் துறவறம் பூண்ட நடிகை மம்தா குல்கர்னி அகாரா மடத்தில் இருந்து நீக்கம்..! பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு வெளிநாட்டில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய பிறகு உத்தரப்பிரதேசத்தில் நடந்து வர... மேலும் பார்க்க

உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்' - எங்கே?

குடித்துவிட்டு கார், பைக் என எந்த வாகனத்தையும் ஓட்டி ஃபைன் கட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஸ்வீடனில் ஒரு குடிமகன் குடித்துவிட்டு ட்ரோன் இயக்கியதற்காக அபராதம் கட்டியுள்ளார், அதுவும் 2,52,194 ரூப... மேலும் பார்க்க