செய்திகள் :

Ashwin: கோபம், நடுவரிடம் வாக்குவாதம்... அஷ்வினுக்கு அபராதம் விதித்த TNPL!

post image

கடந்த ஜூன் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இடையிலான TNPL போட்டியின்போது ரவிச்சந்திரன் அஷ்வினின் கொதிப்பான செய்கைக்கு அவரது போட்டி ஊதியத்தில் 30% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெற்ற இந்த போட்டியின்போது அஷ்வின் சாய் கிஷோர் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனதாக நடுவர் கிருத்திகா அறிவித்தார். இந்த முடிவால் அதிருப்தி அடைந்தார் அஷ்வின்.

Ashwin
Ashwin

நடுவரிடம் களத்திலேயே பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியில் குத்தியதாக வாதாடினார் அஷ்வின். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஏற்கெனவே இரண்டு வைட் பால்களுக்கு ரிவியூக்களைப் பயன்படுத்தியிருந்ததால் அவரால் ரிவியூ எடுக்கவும் முடியவில்லை.

மைதானத்தில் இருந்து வெளியேறும்போது கோபத்தில் பேட்டால் பேடை அடிப்பது, கையுறைகளை கழற்றி எரிவது போன்ற செய்கைகளில் ஈடுபட்டார் அஷ்வின். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

இது குறித்து TNPL அதிகாரி ஒருவர் பேசியதாக கிரிக்பஸ் தளம் வெளியிட்டுள்ள செய்தியில், போட்டிக்குப் பிறகு நடுவருடன் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நடுவரிடம் கருத்து வேறுபாடு தெரிவித்து சண்டையிட்டதற்காக 10% மற்றும் உபகரணங்களைத் தவறாக பயன்படுத்தியதற்காக 20% என போட்டி வருவாயில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அஷ்வின் அபராதங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

போட்டியின் 5 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தபோது, 11 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்த அஷ்வின் அவுட் ஆனார். அதன் பிறகு 94 ரன்களில் அவரது அணி ஆல் அவுட் ஆனது. சேஸ் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி எளிதாக இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

Retired : 29 வயதில் ஓய்வை அறிவித்த நிக்கோலஸ் பூரான் - 2025ல் ஓய்வு பெற்ற முக்கிய வீரர்கள் யார் யார்?

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் 29 வயதிலேயே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்... மேலும் பார்க்க

RCB அணி விற்கப்படுகிறதா? - பிரமிக்க வைக்கும் மதிப்பு; டியாஜியோ பிஎல்சி நிறுவனம் சொல்வதென்ன?

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் உரிமையாளர் மாறுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது உரிமையாளராக இருக்கும் பிரிட்டீஷ் பன்னாட்டு மதுபான நிறுவனமான... மேலும் பார்க்க

"ஒவ்வொரு கேப்டனும் தோனியைப் போல இருக்க விரும்புகிறார்கள்; ஆனால்..." - ஆஸி., முன்னாள் கோச் புகழாரம்!

உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை உச்சத்துக்குக் கொண்டுசென்ற கேப்டன்களில் முக்கியமானவரான தோனியை, தங்களின் 'Hall of Fame' வீரர்களின் பட்டியலில் சேர்த்து கவுரப்படுத்தியிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் க... மேலும் பார்க்க

TNPL 2025 - பேட்டிங் , பௌலிங்கில் ஸ்வப்னில் சிங்கின் ருத்தரதாண்டவம்! எளிதாக வென்ற சென்னை!!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்... மேலும் பார்க்க

MS Dhoni: ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் கௌரவிக்கப்பட்ட தோனி - தோனி ரியாக்ஷன் என்ன?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோணி ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவுக்காக 538 சர்வதேச போட்டிகளில் 17,266 ரன்கள், 829 ஆட... மேலும் பார்க்க

RCB: இடம் மாறும் சின்னசாமி ஸ்டேடியம்?- ஆர்.சி.பி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த முதல்வர் சித்தராமையா!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி ஆர்.சி.பி அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. அடுத்தநாளே, கர்நாடக மாநில அரசும், மாநில கிரிக்கெட் சங்கமும் ஆர்.சி.பி வீரர்களைச் சிறப்பிக்க அவசர அவசரமாக நிக... மேலும் பார்க்க