செய்திகள் :

Ashwin : மேற்கு மாம்பலத்தில் அஷ்வின் பெயரில் சாலை? - சென்னை மாநகராட்சி திட்டம்

post image

இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த அஷ்வினின் பெயரை சென்னையில் ஒரு சாலைக்கு வைப்பதற்கான நடைமுறைகள் சென்னை மாநகராட்சியில் நடந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

IND v NZ - Ravichandran Ashwin

அஷ்வின் இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கு மேல் ஆடிவிட்டார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆட சென்றிருந்த சமயத்தில் அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடிவிட்டார். 700+ சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டார். தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக ஆடிய மிகச்சிறந்த வீரர் என்றும் போற்றப்படுகிறார். சமீபத்தில் மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது. இப்போது, ஐ.பி.எல் இல் சென்னை அணிக்காக ஆடுவதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் அஷ்வின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மேற்கு மாம்பலத்தில் அஷ்வினின் வீடு அமைந்திருக்கும் தெருவுக்கு அஷ்வினின் பெயரை சூட்டுவதற்கான வேலைகள் சென்னை மாநகராட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

அஷ்வின் Carromball Media எனும் நிறுவனத்தை வைத்துள்ளார். அந்த நிறுவனம் சார்பில் ஆர்ய கவுடா தெரு அல்லது ராமகிருஷ்ணாபுரம் 1 வது தெருவுக்கு அஷ்வினின் பெயரை வைக்குமாறு மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கோரிக்கையை ஏற்று தீர்மானமாக நிறைவேற்ற சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருக்கிறது.

Ravichandran Ashwin

விரைவில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

KKR: கோப்பையை வென்றும் கேப்டனை விட்டுக் கொடுத்த அணி - அதே கோர் டீம்; புது கேப்டன் - Team Analysis

ஐபிஎல் 18-வது சீசன் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் மெகா ஏலத்தின்போது மற்ற அணிகளை விடவும் சற்று சோகத்தில் இருப்பது அந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற அணிதான். ஏனெனில் மற்ற அணிகளெல்லாம், அடுத்த சீசனி... மேலும் பார்க்க

IPL 2025: ``கடினமான தருணங்களில் கோலி எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்'' - கோலி குறித்து சிராஜ்

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இதற்கு முன்பு ஆர்சிபி அணிக்காக விளையாடி இருந்தார். சிராஜ் இந்நிலையில... மேலும் பார்க்க

CSK : தோனி வந்தா மட்டும் போதுமா... கப் வேணும் பிகிலு; ருத்துராஜ் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?

ஐபிஎல் 18-வது சீசன் தொடங்கிவிட்டது. காலம் காலமாக கிரிக்கெட் பார்ப்பவர்கள் முதல் 2கே கிட்ஸ் வரை ஐபிஎல்லில் ஆச்சர்யமாகப் பார்க்கின்ற இரண்டு விஷயம், ஒன்று, இப்படி ஒரு டீம் கிடைச்சும், 17 வருஷமா ஆர்.சி.பி... மேலும் பார்க்க

KKR vs RCB: IPL 2025 முதல் போட்டி ரத்தாக வாய்ப்பா? காரணம் என்ன?

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்க... மேலும் பார்க்க

IPL 2025: 10 கேப்டன்கள் முன் நிற்கும் 10 சவால்கள்; இதைச் சமாளிப்பார்களா?

18 வது ஐ.பி.எல் சீசன் நாளை தொடங்கவிருக்கிறது. எல்லா அணிகளும் ஒரு நீண்ட கிரிக்கெட் சீசனுக்குத் தயாராகிவிட்டன. நிறைய புதிய கேப்டன்கள் அணிகளின் தலைமையை ஏற்றிருப்பதுதான் இந்த சீசனின் சுவாரஸ்யமான அம்சமாக இ... மேலும் பார்க்க

Dhoni : 'தோனி ஆடும் வரை இப்படித்தான் நடக்கும்..!' - லக்னோ அணியின் மென்டார் ஜாகிர் கான் ஓப்பன் டாக்

கடந்த ஐபிஎல் சீசன்களில் லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடியபோது, மிகப்பெரிய அளவில் தோனிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து வந்து ரசிகர்கள் ஆச்சரியப்படுத்தினார்... மேலும் பார்க்க