KKR vs RCB: IPL 2025 முதல் போட்டி ரத்தாக வாய்ப்பா? காரணம் என்ன?
ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கின்றனர். மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

ஐபிஎலில், ஒரு சீசனில் கோப்பை வெல்லும் அணியானது, அடுத்த சீசனின் முதல் போட்டியை, அவர்களது சொந்த மைதானத்திலேயே விளையாடுவார்கள். அந்தவகையில், 17ஆவது சீசனில் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18-வது சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில் இந்த முதல் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. காரணம் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

மேலும் கொல்கத்தாவின் சில பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலார்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks