செய்திகள் :

BCCI : இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு கூண்டோடு நீக்கம்? - பின்னணி என்ன?

post image

'பிசிசிஐ அதிரடி!'

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து சில முக்கியமான நபர்களை பிசிசிஐ நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Indian Team
indian team

கடந்த ஓராண்டில் இந்திய அணி நிறைய மோசமான தோல்விகளை தழுவியிருந்தது. சமீபத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தாலும், அதற்கு முன்பு இந்திய அணி அடைந்த மோசமான தோல்விகள் பிசிசிஐக்கு கொஞ்சம் உறுத்தலாகவே இருந்து வந்தது. உள்ளூரில் பல ஆண்டுகள் கழித்து நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒயிட் வாஷ் அவுட் ஆனது.

அதற்கடுத்து ஆஸ்திரேலியா சென்று பார்டர் கவாஸ்கர் தொடரையும் 1-3 என இழந்தது. இந்திய அணியின் பேட்டிங் கடும் மோசமாக இருந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவே தன்னைத் தானே ஒரு போட்டியில் டிராப் செய்திருந்தார். அந்தளவுக்கு நிலைமை மோசமாக சென்றது. பார்டர் கவாஸ்கர் தொடர் முடிந்தவுடனேயே அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் பிசிசிஐ தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்காக ஆடும் வீரர்களும் கட்டாயமாக உள்ளூர் போட்டிகளில் ஆடியாக வேண்டும். அதேமாதிரி வீரர்கள் தங்களின் குடும்பத்தினரை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தனர்.

இந்நிலையில்தான் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் குமார், உடற்தகுதி மேம்பாட்டு பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரை அவர்களின் பொறுப்பிலிருந்து பிசிசிஐ நீக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Abhishek Nayar
Abhishek Nayar

அபிஷேக் நாயர் அணிக்குள் வந்தே 8 மாதங்கள்தான் ஆகிறது. அவரை அணிக்குள் கொண்டு வந்ததே தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி பிசிசிஐ விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அதற்கான காரணங்களும் சொல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.!

MI vs CSK: "ஜடேஜாவை டாப் ஆர்டருக்கு மாற்ற இதான் காரணம்!" - ஸ்டீபன் ப்ளெம்மிங் சொல்வது என்ன?

'மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் இன்று நடக்கவிருக்கிறது. இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் ஆடியிருக்கின்றன... மேலும் பார்க்க

RR vs LSG: அறிமுக ஆட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; பரபரப்புக் காட்டிய ஆவேஷ் கானால் வென்ற லக்னோ!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் களம் கண்டன. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தேர்ந்தெடுத்... மேலும் பார்க்க

Avesh Khan : 'நான் ஒன்றும் ஸ்டார்க் இல்லை... ஆனாலும்!' - திரில்லிங் கடைசி ஓவர் பற்றி ஆவேஷ் கான்!

'லக்னோ திரில் வெற்றி!'ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை திரில்லாக சென்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 2 ரன்கள் வித... மேலும் பார்க்க

IPL 2025: "கமெண்ட்ரில நீங்க என்ன வேணா பேசலாம்; ஆனா..." - ஹர்ஷா போக்லே கேள்விக்கு டிம் டேவிட் பதில்

'பெங்களூரு தோல்வி!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாச... மேலும் பார்க்க

IPL 2025: "சஹால்தான் ஐபிஎல்லின் ஆகச்சிறந்த பௌலர்" - ஸ்ரேயாஷ் ஐயர் ஓப்பன் டாக்

'பஞ்சாப் வெற்றி!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியைப் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற... மேலும் பார்க்க

RCB vs PBKS : 'எங்களோட பேட்டிங்லதான் பெரிய பிரச்சனை இருக்கு!' - கேப்டன் ரஜத் பட்டிதர் அதிருப்தி!

'பெங்களூரு தோல்வி!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று சின்னச்சாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியை பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற... மேலும் பார்க்க