செய்திகள் :

Bihar SIR: ``ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்றுக்கொள்ளுங்கள்'' - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

post image

பீகாரில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி' நடந்தது. அதில் தேர்தல் ஆணையம், 2003-ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்களது குடியுரிமையை நிரூபிக்க அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், இந்த ஆவணங்களில் ஆதார், ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையை குடியுரிமை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியது.

இந்த உத்தரவின் மூலம், தேர்தல் ஆணையம் வாக்குகளைப் பிரிக்க பார்க்கிறது என ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்தன. வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

எதிர்க்கட்சி வாதம்

பீகார்
பீகார்

தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான ராகேஷ் திவேதி, "ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. அதனால், அவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்றுகொள்ள முடியாது.

ஆதார் கார்டு ஒத்துகொள்ளப்படுகிறது. ஆனால், அத்துடன் இன்னொரு ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

நீதிபதிகளின் உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, "எஸ்.ஐ.ஆர் அறிக்கையின் படி, எந்தவொரு ஆவணங்கள் மூலமும் முடிவுக்கு வர முடியாது என்று கூறுகிறீர்கள்.

நாளை, ஆதாரில் மட்டுமல்ல, குறிப்பிடப்பட்டிருக்கும் 11 ஆவணங்களிலும் நீங்கள் மோசடிகளை கண்டுபிடிக்கலாம். அது தனி பிரச்னை.

நாம் இப்போது பெரிய அளவிலான மக்களை தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலக்கி வருகிறோம். ஆனால், அதற்கு பதில், நாம் அதிக அளவிலான மக்களை இதில் உள்ளே கொண்டு வர வேண்டும்.

அதனால், ஆதாரை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று உத்தரவிட்டனர்.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

மனுதாரரின் வழக்கறிஞர்...

மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தேர்தல் ஆணையம் செய்து வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.

"அது முடியாது. ஆனால் எதாவது தவறாக நடந்தால், நாங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிடுவோம்" என்று நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர்.

இன்னும் இந்த வழக்கு முழுவதுமாக முடியவில்லை. இன்று நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி உடன் சந்திப்பு இருப்பதால், அடுத்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் எதிர்த்தும், இந்தியா ஏன் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது?

ரஷ்யா - உக்ரைன் போர் முற்றுப்பெறவில்லை என்றால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சிரித்திருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா ... மேலும் பார்க்க

`பஹல்காம் தாக்குதல்' பா.சிதம்பரத்தின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றத் தகவல் வெளியானதிலிருந்து காங்கிரஸ் முத்த தலைவர் பா.சிதம்பரத்தின் கேள்விகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.... மேலும் பார்க்க

``பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்களா? ஆதாரம் இருக்கா?'' - பா.சிதம்பரம்

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசை பல்வேறு வகையில் சிக்கலில் ஆழ்த்தியிருக்கும் விவகாரங்களில் ஒன்று `ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதல். ஒருபக்கம் 'இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்' என... மேலும் பார்க்க

மலேசியாவில் பேச்சுவார்த்தை; தாய்லாந்து - கம்போடியா போர் சூழல் முடிவுக்கு வருமா?

எல்லைப் பிரச்னை காரணமாக தாய்லாந்து - கம்போடியா இடையே கடந்த வாரம் போர் தொடங்கியது. 'அவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள், இவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள்' என்று மாறி மாறி இரு நாடுகளும் குற்றம்சாட்டி... மேலும் பார்க்க

``சோழர்கள் வளர்த்த காவித்தமிழ்; ஸ்டாலின் ஏன் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்?'' - தமிழிசை கேள்வி

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவிருக்கிறார். இன்றிரவு தூத்துக்குடி விமான நிலையம் வரவிருக்கும் அவரை வரவேற்க செல்கையில் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.கங்கைகொண்ட சோழப... மேலும் பார்க்க

கங்கை கொண்ட சோழபுரம்: பிரதமர் மோடி வருகை, இளையராஜா சிம்பொனி இசை.. களைகட்டும் திருவாதிரை விழா!

மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தமிழக அரசு சார்பில் இராஜேந்திர சோழன் திருவாதிரை விழா கொ... மேலும் பார்க்க