செய்திகள் :

`Blood Money' கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்ற ஒரே வழி! - அது என்ன?

post image

ஏமனில் தன்னுடைய தொழில் கூட்டாளியான தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு இன்று மரண தண்டனை வழங்கப்பட இருந்தது.

ஆனால், இந்திய அரசின் தொடர் முயற்சியால் தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரள அரசு நிமிஷா பிரியாவை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர, கோரிக்கை வைத்து வருகிறது.

அவரை மீட்டுக்கொண்டு வர இருக்கும் ஒரே வழி, 'பிளட் மணி'.

நிமிஷா பிரியா
நிமிஷா பிரியா

பிளட் மணி என்றால் என்ன?

ஏமன் நாட்டில் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் படி, தெரியாமல் ஒரு குற்றம் நடந்துவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பம் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க சொல்லி கோரிக்கை வைக்கலாம் அல்லது நஷ்ட ஈடு கேட்கலாம்.

நஷ்ட ஈடு அதாவது பிளட் மணி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரால் வாங்கப்பட்டு விட்டால், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு விடும். பெரும்பாலும், குற்றவாளிக்கு மன்னிப்பும் வழங்கப்படும்.

நிமிஷா பிரியா வழக்கில் பிளட் மணி வழங்கப்படுவதன் மூலம் தான், அவரை காப்பாற்ற முடியும் என்ற உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது. அதனால், அதற்கான ஏற்பாடுகள் அடுத்து செய்யப்பட உள்ளது.

இந்த நடைமுறை ஏமனில் மட்டுமில்லை... சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.

'இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா?'- விசிக, கம்யூனிஸ்டுகளை விளாசும் எடப்பாடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!' என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இன்று சிதம்பரத்தில் நடந்த பிரசாரத்தில் பேசியவர் திமுக கூட்டணி கட்சிகளை ... மேலும் பார்க்க

ப வடிவ பள்ளி இருக்கைகள்: "மருத்துவர்களைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கணும்" - ஓபிஎஸ் வலியுறுத்தல்

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைகள் குறித்து மருத்துவர்களைக் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி, முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் ... மேலும் பார்க்க

`அதே டெய்லர்... அதே வாடகை..!’ - எடப்பாடியின் Bye Bye பாலிடிக்ஸின் `ஆந்திர’ பின்னணி என்ன?

வழக்கமாக தேர்தல் வந்துவிட்டால், கட்சியினரை களத்தில் இறக்கிவிட்டு களநிலவரத்தை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வார்கள் அரசியல் கட்சியின் தலைவர்கள். ஆனால், தற்போது அந்த காலமெல... மேலும் பார்க்க

Ukraine War: "இந்தியா, சீனா, பிரேசில் மீது தடை விதிக்கப்படும்" - எச்சரிக்கும் நேட்டோ!

இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் ரஷ்யா உடன் தொடர்ந்து வணிக உறவுகளைப் பேணுவதனால் இவற்றின்மீது இரண்டாம் நிலை பொருளாதார தடைகள் போடப்படும் என எச்சரித்துள்ளார் NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே. அமெர... மேலும் பார்க்க

'இப்படி ஒரு தேர்தல் வரலாறு... இதில் என்னைப் பற்றி ஸ்டாலின் பேசலாமா?' - எடப்பாடி பழனிசாமி பதிலடி

எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " திரு. ஸ்டாலின் அவர்களே... நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்த நாளில், அவர் பிறந்த ஊரில் தவெக-வின் மாநில மாநாடு! - பந்தக்கால் நடும் விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து மாநாட்டுக்கான பந்தக்கால் விழா இன்று காலை சிறப்பாக நடந்தது.பந்தக்கால் நடும் விழாமத... மேலும் பார்க்க