Career: எந்த டிகிரி படித்திருந்தாலும், UPSC-ல் பணி; எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
அமலாக்க அதிகாரி அல்லது அக்கவுண்ட்ஸ் அதிகாரி. இது ஒரு நிரந்தர பணி மற்றும் அமைச்சரவை சாராத பணி ஆகும்.
மொத்த காலி பணியிடங்கள்: 156.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயது. (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உள்ளன)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்புத் தேர்வு மற்றும் நேர்காணல்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்.
புதுச்சேரி.
குறிப்பு: இந்தியாவின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வேலையில் அமர்த்தப்படலாம். இந்தப் பணிகளின் தலைமையிடம் புது டெல்லி.
விண்ணப்பிக்கும் இணையதளம்:upsconline.nic.in
விண்ணப்பிக்கும் கடைசித் தேதி: ஆகஸ்ட் 18, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!