செய்திகள் :

Champions Trophy: அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஹர்ஷித் ராணா - ரசிகர்கள் அதிருப்தி ஏன்?

post image

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கான முதல் போட்டி தொடங்கியிருக்கிறது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 பேர் கொண்ட அணி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் தேர்வுக்குழுவை விமர்சித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்திய அணி, அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை அணியில் எடுத்ததுதான்.

ஹர்ஷித் ராணாவைவிட அனுபவம் வாய்ந்த வீரரான அர்ஷ்தீப் சிங் அமரவைக்கப்பட்டுள்ளார். கடந்த சில போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டிருந்த முகமது ஷமி, பிளேயிங் லெவனுக்குத் திரும்பியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடந்த ஒருநாள் தொடரின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு அறிமுகமான ராணா, பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் ஆதரவைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

Team India

ஐபிஎல் 2024ல் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக செயல்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் ஹர்ஷித் ராணா.

சாம்பியன்ஸ் டிராபிக்கான முதல் 15 பேர் அணியில் ராணா இடம்பெறவில்லை. ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக வெளியேறியதால் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டார்.

15 பேர் கொண்ட அணியில் ராணா இணைக்கப்பட்டபோதே சர்வதேச போட்டிகளில் அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ் சிறந்த தேர்வாக இருப்பார் என ரசிகர்கள் பகிர்ந்தனர்.

இப்போது முன்னதாக அணியில் இருந்த வீரர்களுக்கு மாற்றாக அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹர்ஷத் ராணாவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் குரலெழுப்புகின்றனர். இன்றைய போட்டியில் 8 ஓவர்கள் வீசி, 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

IND vs PAK: "இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும்" - முன்னாள் இந்திய வீரர் சொல்வதென்ன?

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும்) நடைபெற்று வருகிறது. A பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், பங்களாதேஷ், முன்னாள் சாம்பியன்கள் இந்தியா (2)... மேலும் பார்க்க

SA vs AFG: பௌலிங்கில் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான்; எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 315 ரன்களை எடுத்திருந்தது. தென்னாப்... மேலும் பார்க்க

Kerala: மேட்சை காப்பாற்றிய ஹெல்மெட்... ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய கேரளா

நடப்பு ரஞ்சி டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 26-ம் ரஞ்சி டிராபி பைனல் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பிப்ரவரி 17-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒன்றில், விதர்பாவு... மேலும் பார்க்க

Dhoni: `மன்னிக்கப் பழகுங்கள்; கடந்து செல்லுங்கள், அது வாழ்க்கையில்..!' - தோனி சொல்லும் அட்வைஸ்

தோனி, கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 ... மேலும் பார்க்க

Mohammed Shami: ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்... அகர்கார், ஜாகீர் கானை தனித்தனியே முந்திய ஷமி!

சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இரண்டு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியத... மேலும் பார்க்க

Champions Trophy: முதல் ஆட்டத்திலேயே காயம்... தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அதிரடி வீரர்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியே நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கும், முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துக்கு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50... மேலும் பார்க்க