"கூட்டணி பேரம் பேசுவதற்காக கட்சி நடத்தவில்லை; அதிமுகவோடு சேரலாம், ஆனால்" - திரும...
China: ``கேண்டீன், டாய்லெட்.. நேரமானால் அபராதம்; அதிக நேர பணி'' - சர்ச்சையில் சிக்கிய சீன நிறுவனம்
ஸ்நாக்ஸ் சாப்பிட்டால், கண்ணாடி பார்த்தால் அபராதம்
சீனாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் கண்ணாடி பார்ப்பது, சிற்றுண்டி சாப்பிடுவதற்கு அபராதம் விதிக்கப்படும் செய்தி பலரின் கவனத்தை பெற்று வருகிறது.
ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட மான் வா ஹோல்டிங்ஸ் லிமிடெட் ( Man Wah Holdings Limited) என்ற நிறுவனத்தில் தான் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சோபாக்கள், மெத்தைகள் போன்றவை விற்பனை செய்யும் நிறுவனம்தான் மான் வா ஹோல்டிங்ஸ் லிமிடெட்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், மான் வா ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகி லியு கடுமையான விதிகளை அமல்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஊழியர்கள் கழிப்பறையில் அதிக நேரம் செலவு செய்கிறார்கள், கண்ணாடி பார்க்கிறார்கள், சிற்றுண்டி சாப்பிடுவதற்காக அதிக நேரம் செலவிடுகிறார்கள் என பல்வேறு காரணங்கள் காட்டி ஊழியர்களை கூடுதல் நேரம் பணி செய்ய அந்த நிறுவனர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
அபராதம் எவ்வளவு தெரியுமா?
மேலும் இதற்காக ஊழியர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. விதிகளை ஏற்காத ஊழியர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வேலை நேரத்தில் ஊழியர்கள் விளையாடுவதை கண்டால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
தகவலின்படி சிற்றுண்டி சாப்பிட்டால் மேலாளர்களுக்கு ரூ.23,981 (2,000 யுவான்), மேற்பார்வையாளர்களுக்கு ரூ.11,990 (1,000 யுவான்) மற்றும் உதவி மேலாளர்களுக்கு ரூ.5,995 (500 யுவான்) அபராதம் விதிக்கப்படும்.
சரியான காரணமின்றி மூன்று முறைக்கு மேல் பணியிடத்தில் இல்லாமல் இருப்பதற்கு ரூ.23,981 (2,000 யுவான்) சம்பளக் குறைவு ஏற்படும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது போன்ற விதிகளால் அந்த நிறுவனம் சர்ச்சை சிக்கியுள்ளது.