செய்திகள் :

CT : `தொடர் நாயகன் விருதை இவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்’ - யாரை சொல்கிறார் அஸ்வின்?

post image

சாம்பியன்ஸ் டிராபி 8 வருடங்களுக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்கள், கொண்டாட்டங்கள், ஆதரவு என சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்திய அணி ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, நியூசிலாந்திடம் பழைய கணக்கை தீர்த்து மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. நியூசிலாந்து அணி மீண்டுமொருமுறை ஐ.சி.சி கோப்பையைத் தவறவிட்டது.

ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திரா

இருப்பினும், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராதான் (4 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 263 ரன்கள்) தொடர் நாயகன் விருது வென்றார். இந்த நிலையில், தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் வருண் சக்ரவர்த்திக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

தனது இந்தி யூடியூப் சேனலில் இது குறித்து பேசிய அஸ்வின், ``யார் என்ன கூறினாலும், என்னுடைய பார்வையில் வருண் சக்ரவர்த்திதான் இந்தத் தொடரின் நாயகன். முழு தொடரையும் வருண் விளையாடவில்லை. இருப்பினும், போட்டியில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார். வருண் இல்லையென்றால் போட்டிகள் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

ஒருவேளை நான் நடுவராக இருந்திருந்தால், தொடர் நாயகன் விருதை வருணுக்கு கொடுத்திருப்பேன். கிளென் பிலிப்ஸை அவர் ஆட்டமிழக்கச் செய்த விதத்தைப் பாருங்கள். ஸ்டம்ப்ஸை கிளென் பிலிப்ஸ் மறைக்கவில்லை. அதனால், வருண் கிரீஸுக்கு அகலமாகச் சென்று கூக்ளி வீசினார்.

வருண் சக்ரவர்த்தி
வருண் சக்ரவர்த்தி

என் பார்வையில் வருண்தான் தொடர் நாயகன். மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்த ஒருவருக்கு இந்த விருது கொடுத்திருக்க வேண்டும். தொடர் நாயகன் விருதுக்கு வருண் தகுதியானவர்." என்று கூறினார்.

அஸ்வின் பேச்சு குறித்து உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடவும்.

'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' - ஷேன் பாண்ட் சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியின் போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் சி... மேலும் பார்க்க

Pakistan: ``தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது" - விமர்சிக்கும் அப்ரிடி

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுலியே வெளியேறியது அந்நாட்டு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு ப... மேலும் பார்க்க

Rishabh Pant: `IPL ஆடுவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை; என்னுடைய ஒரே கனவு...' - ரிஷப் பன்ட்

சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த சூட்டோடு மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல் தொடங்குகிறது. இதில், ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 27 கோடிக்கு ஏலம் போன ரிஷப் பன்ட்டின் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பைக் ... மேலும் பார்க்க

'நாங்கதான் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்தினோம்; ஆனா...’ - இறுதி போட்டி சம்பவம் குறித்து அக்ரம் வேதனை

தற்போது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், இறுதிப்போட்டியின் முடிவில் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, இந்த சாம்பியன்ஸ... மேலும் பார்க்க

Shreyas Iyer: "கோப்பை வென்ற பிறகும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை" - ஸ்ரேயஸ் வேதனை

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, பி.சி.சி.ஐ ஒப்பந்தத்திலிருந்தும் நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், 2024-ல் ஐ.பி.எல் உட்பட உள்ளூர் கிரிக்கெ... மேலும் பார்க்க

K.L.Rahul: ``இறங்குற இடமில்ல; பண்ற சம்பவம்தான் முக்கியம்"- ராகுல் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் ... மேலும் பார்க்க