செய்திகள் :

DC vs LSG: "அஷுதோஷ் அல்ல இவர்தான் எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்தார்" - தோல்விக்குப் பின் பன்ட்

post image

ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ பரபரப்பான ஆட்டத்தில் கடைசி வரைப் போராடிய லக்னோ அணி இறுதி ஓவரில் டெல்லியிடம் வெற்றியைக் கோட்டைவிட்டது. முதலில் அதிரடியாக பேட்டிங் ஆடி 210 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்து, பந்துவீச்சில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திப் போராடிய லக்னோ அணி, டெல்லி வீரர் அஷுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கடைசி ஓவரில் வெற்றியை நழுவவிட்டது.

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

'அவர்தான் ஆட்டத்தை பறித்தார்'

தோல்விக்குப் பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், ``எங்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினார்கள். ஒரு அணியாக ஒவ்வொரு ஆட்டத்திலிருந்தும் நேர்மையான விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். எந்த அளவுக்கு அடிப்படை விஷயங்களைச் செய்கிறோமோ அந்த அளவுக்கு எதிர்காலத்தில் அது நமக்கு சிறப்பானதாக இருக்கும்.

தொடக்கத்திலேயே நாங்கள் விக்கெட்டுகள் எட்டுத்தோம். இருப்பினும், அவர்கள் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைத்திருந்தார்கள். ஒன்று ஸ்டப்ஸ் - அஷுதோஷ், மற்றொன்று விப்ராஜ் அஷுதோஷ். விப்ராஜ் நன்றாக விளையாடினார். அவர்தான் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்தார் என்று நினைக்கிறேன்.

விப்ராஜ் நிகம்
விப்ராஜ் நிகம்

இந்தப் போட்டியில் நிறைய அழுத்தத்தை உணர்ந்தோம். ஆனாலும், இப்போட்டியிலிருந்து நிறைய நேர்மையான விஷயங்களை எடுத்துக்கொள்கிறோம். இந்த ஆட்டத்தில் அதிர்ஷ்டமும் ஒரு பங்கு வகித்தது. இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது என்றாலும், சிறப்பான கிரிக்கெட்டை நீங்கள் விளையாடவேண்டும்." என்று கூறினார்.

டெல்லி அணியில் ஸ்டப்ஸ் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய விப்ராஜ், அதிரடியாக 15 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி என 39 ரன்கள் அடித்து அஷுதோஷின் வேலையை எளிதாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

CSK vs RCB : 'டார்கெட் மட்டும் 170 க்குள்ள இருந்திருந்தா கதையே வேற' தோல்விக்குப் பின் ருத்துராஜ்

'சென்னை தோல்வி!'சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் பெங்களுரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. 17 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கத்தில் சென்னை ... மேலும் பார்க்க

CSK vs RCB: `என்ன ஆச்சு CSK?' தோல்விக்கான அந்த 3 காரணங்கள்

'பெங்களூரு வெற்றி!'அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூரு அணி 2008 இல் சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தியிருந்தது. அதன்பிறகு, இத்தனை ஆண்டுகளில் சேப்பாக்கத்தில் பெங்களூரு அணி சென்னையை வீழ்த்தியதே இல்ல... மேலும் பார்க்க

Dhoni: `தம்பி நீங்க அவுட் கெளம்பலாம்' - பிலிப் சால்ட்டை கண்ணிமைக்கும் நொடியில் அசால்ட்டாக்கிய தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே அணியும், ஆர்.சி.பி அணியும் இன்று மோதின. 2008-க்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கெதிராக வெற்றி பெற்றதில்லை என்கிற வரலாற்றை மாற்றியமைக்க பெங்களூரு... மேலும் பார்க்க

CSK vs RCB : 'பதிரனாவை மீண்டும் அழைத்து வருகிறோம்!' - சர்ப்ரைஸ் கொடுத்த ருத்துராஜ்

சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை சென்னை அணி வென்றிருக்கிறது. சென்னை அணி முதலில் பந்துவீசப்போகிறது.Ruturaj Gaikwadசென்னை அணியின... மேலும் பார்க்க

Dhoni: "CSK ரசிகர்களிடம் தோனி இதைச் சொல்ல வேண்டும்" - சென்னை அணியின் முன்னாள் வீரர் ஓப்பன் டாக்

ஐபிஎல் இன்றைய (மார்ச் 28) போட்டியில் ருத்துராஜ் தலைமையிலான சி.எஸ்.கே அணியும், பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணியும் சேப்பாக்கத்தில் மோதுகின்றன. கடந்த சீசனில், சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டிய... மேலும் பார்க்க