செய்திகள் :

Dogs: `நாய்களின் உடலில் மைக்ரோ சிப்' - சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன? - முழு விவரம்!

post image

தெரு நாய்கள்:

தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக தெரு நாய்கள் தொல்லை, ரேபிஸ் நோய் தாக்குதல் போன்றவை கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரம் விவாதக்களத்துக்குள் இருக்கிறது.

இந்த நிலையில், வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதை கட்டாயமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கடந்த ஜனவரி 30-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு அதன் உரிமையாளர்கள் மைக்ரோ சிப் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

DOG
தெருநாய்

சிப் கட்டாயம்:

இதற்கிடையில், சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களின் உடலில் சிப் பொருத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் முதல் கட்டமாக 4000 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என உத்தரவு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3,000 அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சிப் எதற்கு?

அந்த சிப் மூலம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா? என்பனவற்றைக் கண்காணிக்கவும், வீட்டு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை உதவும் என சென்னை மாநகராட்சி நம்புகிறது.

நாய்களின் உடலில் மைக்ரோ சிப்கள் தோலுக்கு அடியில், பொதுவாக தோள்பட்டைப் பகுதியில் ஊசி மூலமாகச் செலுத்தப்படும். இந்த சிப் ஒரு அரிசிப் பருக்கையின் அளவில் மட்டுமே இருக்கும்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவா உள்ளிட்ட ஓரிரு இடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

மைக்ரோ சிப்
மைக்ரோ சிப்

இந்த மைக்ரோ சிப்பில் நாயின் பெயர், இனம், நிறம், பாலினம், வயது, தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) வழங்கிய சிப் எண் ஆகிய விவரங்கள் பதிவேற்றப்பட்டு இருக்கும்.

அந்த நாய்கள், எந்தப் பகுதியில் காணப்படுபவை என்ற ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் (புவி குறியீடு) விவரமும், வீட்டு நாய்களில் அவற்றின் உரிமையாளர் விவரங்களும் இருக்கும்.

உடலில் அந்த சிப் இருக்கும் இடத்திற்கு அருகில் ஸ்கேனர் கருவியைக் கொண்டு செல்லும்போது அதிலுள்ள விவரங்களைப் படிக்க முடியும்.

RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சிப்களில் நாயின் விபரங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். இந்தத் தரவுகள் பிரத்யேக மென்பொருள் செயலியின் மூலம் பராமரிக்கப்படும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஏர்போர்ட் மூர்த்தி மீது நடந்த தாக்குதல்; "இதுதான் திராவிட மாடலா?"- நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலக வாயிலில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏர்போர்ட் மூர்த்தி, ... மேலும் பார்க்க

எலி கடித்து இறந்த குழந்தைகள்: ``இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" - அரசை விமர்சிக்கும் ராகுல்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. ... மேலும் பார்க்க

சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய' பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்களுக்கு உதவுமா?!

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா... ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்தி... மேலும் பார்க்க

``2026-ல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார், ஆனால்; ஓபிஎஸ், டிடிவி இருவரும்'' - அண்ணாமலை கணிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக... மேலும் பார்க்க

ADMK: ``செங்கோட்டையன் சொல்வது நல்லதுதான்; அரசியலில் எதுவும் நடக்கலாம்'' - பாஜக நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க

ADMK: ``செங்கோட்டையனின் வேண்டுகோள்; நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம்'' -ஓபிஎஸ் பதில்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க