செய்திகள் :

Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்கம்!

post image

பட்டினி பெருமருந்து என்கிறது சித்த மருத்துவம். அப்படி என்னென்ன நன்மைகளை இந்தப் பட்டினி நமக்கு செய்கிறது; இதை யாரெல்லாம் கடைபிடிக்கலாம்; யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்; பட்டினி இருப்பதற்கான முறை; அதை எவ்வாறு முடிக்க வேண்டும் ஆகியவற்றைப் பற்றி சித்த மருத்துவர் செல்வ சண்முகம் இங்கே சொல்கிறார்.

பட்டினி பெருமருந்து
பட்டினி பெருமருந்து

* பட்டினி கிடத்தல் அல்லது உண்ணாவிரதம் என்று அழைக்கப்படும் நிகழ்வை கடைபிடிப்பதினால் நம் உடலில் நோய் வருவதற்கான காரணங்களைக் குறைக்க முடியும்.

உதாரணமாக, இதய செயலிழப்புக்கு காரணமான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற காரணிகளை வராமல் முன்கூட்டியே தடுக்க முடியும்.

* ஃப்ரீ ரேடிக்கல்ஸ் எனப்படும் முழுமை பெறாத செல்களை வெளியேற்றி புற்றுநோய் வராமல் தடுக்கும்.

*இரிட்டபிள் பவல் டிஸார்டர், ஆட்டோ இம்யூன் டிஸார்டர் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி பட்டினி இருப்பது உதவியாக இருக்கும்.

* வளர்ச்சி ஹார்மோன் அதிகரிக்கும்; பார்க்கின்சன்ஸ் மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கும் பட்டினி இருத்தல் உதவி செய்யும்.

அல்சைமர்
அல்சைமர்

பட்டினி இருத்தல் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையையும், அவர்களின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு வழங்கப்பட வேண்டிய அறிவுரையாகும்.

பொதுவாக, வாரம் ஒருநாள் பட்டினி இருத்தல் சிறந்தது. அதுவும், விடுமுறை நாள்களில் பட்டினி இருத்தல் மிகவும் நன்று.

இது முடியவில்லை ஒருவேளை மட்டும் இருக்கலாம். ஆனால், காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். அதற்குமாறாக மதியம் அல்லது இரவு நேரங்களில் பட்டினி இருக்கலாம்.

உடல் பருமனாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்பெற்று ஐந்து வயதில் இருந்தே வாரம் ஒருநாள் ஒருவேளை மட்டும் பட்டினி இருக்கலாம்.

உடல் பருமன்!
உடல் பருமன்!

* பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் பட்டினி இருக்கக்கூடாது. குறிப்பாக அதிகளவு ஊட்டச்சத்து தேவைப்படும் இரண்டாவது டிரைமெஸ்டரில் கூடவே கூடாது. ஒரு வேளை மட்டும் உணவைத் தவிர்க்க விரும்பினாலும் கஞ்சி, பழங்கள் என சாப்பிட வேண்டும்.

* பாலூட்டும் தாய்மார்கள் பட்டினிக் கிடப்பதினால் சரியான அளவு ஊட்டச்சத்து குழந்தைக்குச் சென்றடையாது. எனவே இவர்களும் பட்டினி இருத்தல் கூடாது.

* நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், சாப்பிட்டப் பிறகு மாத்திரை சாப்பிட வேண்டியவர்கள் பட்டினி கிடத்தல் கூடாது.

* மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பட்டினி இருக்கும்போது அவர்களின் நோய் தீவிரமடையும். எனவே அவர்கள் நன்கு சாப்பிட வேண்டும். பட்டினி இருத்தல் கூடாது.

*உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவர்களுடைய மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெற்று, மருந்துகளை இடைநிறுத்தம் செய்து, அதற்கேற்றார்போல் பட்டினி இருக்கலாம்.

Old age (Representational image)

வயதானவர்கள் கஞ்சிபோல ஏதாவது ஒரு லேசான உணவை தயார் செய்துகொண்டு ஒரு வேளை மட்டும் பட்டினி இருக்கலாம். முடியவில்லை என்றால், உடனே சாப்பிட்டுவிடலாம். உண்மையில், பட்டினி இருப்பதினால் அவர்களின் ஆரோக்கியம் கூடும்.

கூடவே கூடாது. காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. மதியம் அல்லது இரவில் பட்டினி இருக்கலாம்.

காலை நேரத்தில் பட்டினி இருக்கலாமா?
காலை நேரத்தில் பட்டினி இருக்கலாமா?

பட்டினி இருக்கபோகும் நாளைக்கு முன் தினம் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக நன்கு திடமான உணவை உண்ண வேண்டும். பிறகு, மறுநாள் முழுவதும் பட்டினி இருக்க வேண்டும். அதற்கு அடுத்த நாள் காலை 6:00 மணிக்கு மீண்டும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் பட்டினி இருந்தால்தான் புற்றுநோய்கூட வராமல் தடுக்க முடியும் என்கின்றன ஆய்வுகள்.

பட்டினியை முடிக்கும்போது நீர்த்துவமான கஞ்சி, ரசம், மோர் போன்றவற்றை முதலில் உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இவ்வாறு முடிக்கும்போது பானகத்தை எடுத்துக்கொள்வது வெகு சிறப்பு.

இது, நாம் அடுத்தடுத்து உண்ணும் உணவுப்பொருள்களை சிறப்பாக செரிமானம் செய்ய உதவும்.

தவிர, நோன்புக்கஞ்சி, இஞ்சி சீரகம் கலந்த மோர் முதலியவற்றையும் அருந்தி பட்டினியை முடிக்கலாம்.

தற்போதைய அறிவியல் ஆய்வுகள், வாரத்திற்கு ஒரு நாளாவது பட்டினி இருந்து உடல் உறுப்புகளுக்கு ஓய்வு அளித்தால் பல்வேறு வாழ்வியல் நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்கின்றன. உண்மையில் பட்டினி என்பது பெருமருந்துதான் என்கிறார்'' மருத்துவர் செல்வ சண்முகம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Karan Thapar: ``என்ன குற்றம்னு சொல்லாமலே ஊடகவியலாளர் கரன் தாப்பருக்கு சம்மன்'' - முதல்வர் ஸ்டாலின்

`தி வயர்' செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன், கரண் தாபர். இவர்கள் இருவரும் தொடர்ந்து அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கிவருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நிகழ்த்தியத... மேலும் பார்க்க

``தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது'' - உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை மாநகராட்சியி... மேலும் பார்க்க

Aloor Shanavas Interview | DMK அரசை காப்பாற்றும் Thiruma? தலித் வாக்குகளை இழக்கும் VCK? | TVK | NTK

தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும், 'தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்' என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களில் ஸ்ட்ரோக் வரும் என்பது உண்மையா?

Doctor Vikatan:என்னுடைய தோழியின் அப்பாவுக்கு கண்களில் ஸ்ட்ரோக் வந்ததாகவும் அதற்கு சிகிச்சை எடுத்ததாகவும் சொல்கிறாள். கண்களில் ஸ்ட்ரோக் வருமா, அதன் அறிகுறி எப்படியிருக்கும், எப்படி சரி செய்வது?பதில்சொல... மேலும் பார்க்க

Walking: எங்கு, எப்படி, எத்தனை நாள்; எவ்வளவு நேரம்; 8 வாக்கிங்; பின்னோக்கி நடத்தல்-A to Z தகவல்கள்!

நடைப்பயிற்சி எனும் வாக்கிங் உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், எந்த நேரத்தில், எவ்வளவு நேரம், எப்படி நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப்பலனும் கிடைக்கும் என்கிற விழிப்... மேலும் பார்க்க

ட்ரம்ப் சந்திப்பு: ``அமெரிக்கா காட்டிய `இந்த' முக்கிய சிக்னலைப் பாராட்டுகிறோம்'' - ஜெலன்ஸ்கி

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்புநேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த சந்திப்பின் போது, ஏழு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். கடந்த 1... மேலும் பார்க்க