செய்திகள் :

Frank Caprio: அமெரிக்காவின் கனிவான நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்; கடைசியாக சொன்ன செய்தி!

post image

நீதிபதி பிராங்க் கேப்ரியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அமெரிக்காவில் உள்ள ரோட் தீவைச் சேர்ந்த இவர் கனிவான விசாரணைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.

88 வயதான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்துள்ளார்.

கோர்ட்ரூம் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், வழக்குகளை பரிவுடனும் மனிதாபிமானத்துடன் கையாளும் விதம் உலகம் முழுவதுமுள்ள மக்கள் மனங்களை வென்றது.

குடும்பத்துடன் கேப்ரியோ
குடும்பத்துடன் கேப்ரியோ

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உயிரிழப்பு செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் "ஒரு மரியாதைக்குரிய நீதிபதியாக மட்டுமல்லாமல் அர்ப்பணிப்புள்ள கணவர், தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா மற்றும் நண்பராகவும் நினைவுகூறப்படுவார்" எனக் கூறப்பட்டுள்ளது.

`பிரார்த்தனைகளின் சக்தியை நம்புகிறவன் நான்'

இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஃபாலோவர்களுக்காக இறுதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த ஆண்டு நீங்கள் எல்லோரும் எனக்காக பிரார்த்திக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொண்டேன். நீங்கள் நிச்சயமாக செய்தீர்கள்.

ஆனால் நான் கடுமையான சூழலை கடந்து வருகிறேன். உடல் நலத்தில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டு இப்போது மருத்துவமனையில் இருக்கிறேன்.

Frank Caprio

மீண்டும் உங்களிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுமாறு கேட்கிறேன். உங்களால் முடிந்தால் உங்கள் பிரார்த்தனைகளின்போது என்னை நினைவு கொள்ளுங்கள்,

நான் பிரார்த்தனைகளின் சக்தியை முழுமையாக நம்புகிறவன். நமக்கு மேலிருக்கும் எல்லாம் வல்லவர் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதனால் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்." எனப் பேசியிருந்தார்.

நீதிபதி பிராங்க் கேப்ரியோ "நீதி என்பது நியாயமாகவும், கனிவாகவும், கண்ணியத்திலும் மரியாதையிலும் வேரூன்றியதாகவும் இருக்க வேண்டும்" என நம்புபவர்.

1985 முதல் 2023-ல் ஓய்வு பெறும் வரை நகராட்சி நீதிபதியாகப் பணியாற்றினார். அமெரிக்காவின் மிகச் சிறந்த நீதிபதி என்ற பெயரை சம்பாதித்துள்ளார்.

தீர்ப்பு வழங்கும்போது அவர் கைதிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் நடத்தும் விதம் மட்டுமல்லாமல் அவர் கூறும் அறிவுரைகளும் அவரைப் பின்தொடர்பவர்கள் அதிகரிக்க காரணம்.

சீனா: "கல்யாணப் பொண்ணு உன் தங்கச்சிப்பா" - ட்விஸ்ட் கொடுத்த தாய்; ஆனாலும் திருமணம் நடந்தது எப்படி?

சீனாவின் சுஜோ என்ற இடத்தில் நடைபெறவிருந்த திருமணம், உணர்ச்சிவசமான குடும்ப மறு-ஒன்றிணைவாக மாறியிருக்கிறது.சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தளம் கூறியிருப்பதன்படி, 2021ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மணம... மேலும் பார்க்க

`தந்தை ஆசீர்வாதம் தான் காரணம்' - லாட்டரியில் ரூ.11 கோடி வென்ற பொறியாளர் சொல்வதென்ன?

இங்கிலாந்தில் வசிக்கும் எஞ்சினியர் ஒருவர் தனது மறைந்த தந்தையின் ஆசீர்வாதத்தால் ரூ.11 கோடி லாட்டரியில் வென்றதாக நம்புகிறார்.போல்டனில் வசிக்கும் 46 வயதான டாரன் மெக்குவைர் என்பவர் அவரது தந்தையின் பிறந்த ... மேலும் பார்க்க

இந்திய இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்த பிரபல டிரக் ஓட்டுநர் - யார் இந்த ராஜேஷ்?

இந்தியாவில் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், பலர் முழுநேர தொழிலாக அதில் பணம் சம்பாதித்து வருகின்றனர். பலரும் தங்களின் அன்றாட வேலைகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து அதன் மூலம் சம்பாதித்தும் பிரபலமாகியும் வர... மேலும் பார்க்க

Rolls-Royce: தலைப்பாகை நிறத்துக்கு ஏற்ப ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்; வைராலான ரூபன் சிங் யார்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் தொழிலதிபர் ரூபன் சிங் என்பவர், 15 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்பட பல ஆடம்பர கார்களை வைத்துள்ளார். குறிப்பாக அவரின் தலைபாகை வண்ணத்திலேயே ரோல்ஸ்-ராய்ஸ் கார் இருக்கும் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் ஏன் நடத்தப்பட்டது? - அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் கர்னல் சோஃபியா குரேஷி சொல்வதென்ன?

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் கர்னல் சோஃபியா குரேஷி "ஆபரேஷன் சிந்தூர் ஏன் தேவைப்பட்டது" என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கௌன்... மேலும் பார்க்க

சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் - தொழிலதிபர் மகள் சானியா சந்தோக் திருமணம் நிச்சயதார்த்தம்?

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் தனது தந்தையை போல, கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளார். 25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர், சானியா சந்தோக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள... மேலும் பார்க்க