செய்திகள் :

Grammy Awards: `70 வயதில் சாதனை' கிராமிய விருதை வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி

post image
உலகெங்குமுள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான 67வது ‘கிராமி விருதுகள்’ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சிறந்த நாட்டுப்புற ஆல்பமாக Beyoncé-ன் கவ்பாய் கார்ட்டர் பாடல் தேர்வானது. அதிகபட்சமாக ‘Not Like Us’ பாடல் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது.

சந்திரிகா டாண்டன்

இதில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சந்திரிகா டாண்டன் என்பவர் ‘த்ருவேனி’ என்ற பாடலுக்காக ‘Best New Age Album’ என்ற பிரிவில் விருது வென்றிருக்கிறார். பலரும் இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “இசை என்பது காதல், இசை என்பது ஒளி, இசை என்பது சிரிப்பு. நாம் அனைவரும் அன்பு, ஒளி மற்றும் சிரிப்பால் எப்போதும்  சூழப்பட்டிருப்போம். இசையை உருவாக்கும் அனைவருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

70 வயதுடைய சந்திரிகா டாண்டன் சென்னையைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள MCC கல்லூரியில் பயின்றிருக்கிறார். இவர் அமெரிக்காவில் தொழிலதிபராகவும், இசைக்கலைஞராகவும் இருக்கிறார். பெர்க்லீ இசைக்கல்லூரியின் முதல்வருக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.

சந்திரிகா டாண்டன்

இந்துஸ்தானி மற்றும் கர்நாடகம் மேற்கத்திய பாரம்பரியங்களில் மாஸ்டர்களால் பயிற்சி பெற்றவர். உலக அரங்கில் பல இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார். இரண்டு முறை கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர் இம்முறை விருதை வென்று அசத்தியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

தனியிசை: "கேபர், அசல், பால் டப்பா... யாராவது 'சூப்பர் ஸ்டார்' ஆக வேண்டும்" - எழுத்தாளர் சீனிவாசன்

கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட இப்போது நாம் அதிகமாக தனியிசைக்கு (Independent Music) செவிகொடுக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?தனியிசைக் காலம்:யூடியூப் தளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகும் தனி... மேலும் பார்க்க

பவதாரிணி: "கவனமெல்லாம் இசையிலிருந்ததால், குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுட்டேன்" - இளையராஜா உருக்கம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு இதே நாளில் (ஜனவரி 25, 2024) மறைந்தார். இந்நிலையில், தனது மகளின் நினைவு நாளான இன்று இளையராஜா எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பதி... மேலும் பார்க்க

`உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்… உனக்குள்தானே நான் இருந்தேன்' - என்றும் மறவா ஜெயச்சந்திரன் ஹிட்ஸ்

`சாகா வரம் போல் சோகம் உண்டோ' என்ற வாக்கியம் கலைஞர்களிடத்தில் மட்டும், `சாகா வரம் போல் மகிழ்வேதும் உண்டோ' என மாறிவிடுகிறது.கலைஞர்கள் மட்டும்தான் தாங்கள் மறைந்த பின்பும் தங்களின் கலைகளின் ஊடாக காலம் உள்... மேலும் பார்க்க

AR Rahman : ``ரஹ்மான் நட்பாகப் பழகக்கூடியவர் அல்ல..." - பாடகர் சோனு நிகம் ஓப்பன் டாக்

தமிழ் சினிமாவிலிருந்து இந்தி சினிமா அங்கிருந்து ஹாலிவுட் என இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்று உலக அளவில் பிரபலமானவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "கலையும்,இசையும் இல்லையென்றால் இந்தியர்களுக்கு வாழ்க்கையே இல்லை"- இளையராஜா

சென்னை ஐஐடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இளையராஜா பேசியிருக்கிறார்.சென்னை ஐஐடியில் நேற்று ( ஜனவரி 9) கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் இளையராஜாவும் ... மேலும் பார்க்க

Jayachandran: `ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு...' - மறைந்தார் பிரபல பாடகர் ஜெயச்சந்திரன்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால், கேரளா திருச்சூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.கேரளாவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், மலையாளம... மேலும் பார்க்க