செய்திகள் :

Ground water tax: நிலத்தடி நீருக்கு வரி விதிப்பா? – மத்திய அரசு விளக்கம்!

post image

நிலத்தடி நீர் வீணாவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தவிர்க்க மத்திய அரசு நிலத்தடி நீருக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று (ஜூன் 27) தகவல்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து பலரும் இதற்கு எதிர்புத் தெரிவித்து 'மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும்' என்று கூறியிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்திருந்தனர்.

நிலத்தடி நீர்

இதைத் தவறாக செய்தி என்று மறுத்திருக்கும் மத்திய அரசு இதுகுறித்து இன்று (ஜூன் 28)  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"மத்திய அரசு முன்னோடியாகக் கொண்டு வரும் புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு கட்டணம்/ வரி செலுத்த வேண்டும் என்று சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டது நீர்வளத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்தது.

M-CADWM திட்டமானது நீர்ப்பாசன செயல்திறனை மேம்படுத்துதல், சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்தல், பயனுள்ள நீர் மேலாண்மை மற்றும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு வரி விதிக்கப்படும் என்ற எந்தவிதமான உத்தரவும் இல்லை. சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ சி.ஆர். பாட்டீலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் தெளிவாக விளக்கமளித்துவிட்டார்.

த்திய நீர்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ சி.ஆர். பாட்டீல்

இந்திய அரசியலமைப்பின் கீழ் ‘விவசாயம்’ மற்றும் ‘நீர்’ இரண்டும் மாநில பிரிவுகளின் கீழ் வருகிறது. நிலத்தடி நீருக்கு வரி வசூலித்தாலும் மாநில அரசு மட்டுமே அதுதொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியும்" என்று தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``விசிக, காங்கிரஸ் கட்சிக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்?'' - பாமக அன்புமணி கேள்வி!

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இதற்கிடையே ராமதாஸ் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பிடிக்கவில்லை என்ற... மேலும் பார்க்க

`பாதிக்கப்பட்ட பெண்ணும் மகள்தான்; என் மகன் மீது நடவடிக்கை எடுங்கள்' -குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை

கடந்த ஜூன் 25-ம் தேதி அன்று கொல்கத்தா நகரின் சவுத் கொல்கத்தா சட்டக் கல்லூரியின் வளாகத்தில் 24 வயது மாணவி மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட விவகாரம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில்... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக் குழுவில் கமல்; "தாமதமான அங்கீகாரமே..." - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திரைப்படத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்குத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல் ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.Oscars ஆஸ... மேலும் பார்க்க

"அமைச்சருக்கு இது அழகல்ல" - ராஜ கண்ணப்பனுக்கு எதிராகப் போராட்டம்; அரசியல் கட்சிகள் எச்சரிப்பது என்ன?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 4-வது நபராக வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார் ராஜ கண்ணப்பன். மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் விவகாரத்தில் மிகவும் பொறுப்பற... மேலும் பார்க்க

`காலை உணவில் பல்லி' - 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி; திருப்பூர் பள்ளியில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 150 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் வழங்கப்ப... மேலும் பார்க்க

Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த பிராமணப் பத்திரம்!

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், 2022-ம் ஆண்டு ஒரு தம்பதி உட்பட மூன்று பேர் இரண்டு பெண்களை நரபலி கொடுத்து சடங்கு செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க