செய்திகள் :

Health: வெப்பத்தால் வரும் நோய்களை குணமாக்கும் பனங்கற்கண்டு!

post image

னைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரைப் பதமாகக் காய்ச்சித் தயாரிக்கப்படுவதே பனங்கற்கண்டு. இதில், நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. அதுபற்றி சொல்கிறார் இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம்.

பனங்கற்கண்டு
பனங்கற்கண்டு

* பூண்டுப்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச்சளி குணமாகும். 10 பூண்டுப்பற்களை 50 மி.லி பால், 50 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பூண்டு ஓரளவு வெந்ததும் இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள், இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைய வேண்டும். இதை இரவில் தூங்கப்போவதற்கு முன் குடித்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகலும். வாய்வுத்தொல்லையும் நீங்கும்.

* பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பதால் சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும். தாகமும் தணியும்.

* முருங்கைப்பூவைப் பாலில் வேகவைத்துப் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால் முருங்கைப்பூப் பால் தயார். இதை இரவு உறங்கப்போவதற்கு முன் குடித்தால் உடலில் புதுத்தெம்பு கிடைக்கும். உடல் மெலிந்த குழந்தைகள், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூப் பால் ஒரு வரப்பிரசாதம்.

பனங்கற்கண்டு
பனங்கற்கண்டு

* 100 கிராம் பனங்கற்கண்டில் 0.20 கிராம் புரதம், 0.04 கிராம் கொழுப்பு, 98.76 கிராம் சர்க்கரை, 0.30 கிராம் உலோக உப்புகள், 58.70 மி.லி கிராம் கால்சியம், 5.40 மி.லி கிராம் பாஸ்பரஸ் உள்ளன.

* அதிமதுரத்துடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி இதமான சூட்டில் குடித்தால் தொண்டைப்புண் சரியாகும்.

கர்ப்பம்

* சுக்கு, மிளகு, திப்பிலியைப் பொடியாக்கி அதோடு பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும். பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள், ஆசிரியர்கள் எனக் குரலைப் பயன்படுத்திப் பணியாற்றுபவர்களுக்குத் தொண்டை தொடர்பான பிரச்னைகள் குணமாகும்.

* கர்ப்பிணிகள் சில நேரங்களில் சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவார்கள். வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் சீக்கிரம் சிறுநீர் வெளியேறும்.

Summer: வெயிலை நாம் ஏன் வெறுக்கிறோம்? காரணம் சொல்லும் நிபுணர்!

வெயிலில் செல்ல நாம் ஏன் இவ்வளவு தயங்குகிறோம்? இதற்கு உளவியல் ரீதியாக அளிக்கப்படும் முதல் பதில் வியர்வை மற்றும் அதனால் உருவாகும் துர்நாற்றம், அரிப்பு மற்றும் சருமப் பிரச்னைகள். நம்மில் பெரும்பாலானோர் ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசி, அதிகம் சாப்பிடுகிறேனோ என்ற பயம்.. தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 45. தினமும் காலை உணவைத் தவிர்ப்பதில்லை. ஆனாலும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் பசிக்கிறது. எனவே, காபி, டீயுடன் பிஸ்கட், வடை என ஏதேனும் சாப்பிடுகிறேன். அதேபோலமதிய உணவு சாப்பிட்டு... மேலும் பார்க்க

Health: சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுகிறீர்களா? என்னவெல்லாம் பாதிப்புகள் வரும் தெரியுமா?

சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் ஒத்திவைப்பது, தூங்காமல் இருப்பது பற்றிப் பார்த்திருக்கிறோம். சிறுநீர் கழித்தலை ஒத்திப்போடுகிறவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?இன்றைக்கு நகர்ப்புறங்களில் பொது ... மேலும் பார்க்க

Mayonnaise: `மையோனைஸை விற்க, வாங்க, சேமித்து வைக்க தடை...' - தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெளிநாட்டு உணவுகள் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக தந்தூரி, பார்பிகியூ, சவர்மா எனப் பல்வேறு அரேபிய உணவுகளுக்கான கடைகள் வீதிகள்தோறும் இருக்கிறது. இந்த உண... மேலும் பார்க்க

Health: 20களில் கருத்தரித்தால்தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?

உயர் கல்வி, வேலையில் அடுத்தகட்ட வளர்ச்சி, ஆன்சைட் என இந்தக் காலப் பெண்கள் தங்கள் கரியர் மீது மிகுந்த காதலுடன் இருக்கிறார்கள்.அதே காலகட்டத்தில் திருமணம், குழந்தை எனத் திட்டமிட்டால் அது தங்கள் கரியரில் ... மேலும் பார்க்க

தனியாக பேசுவது இயல்பா? மனநோயின் அறிகுறியா? - உளவியல் நிபுணர் எச்சரிப்பது என்ன?

நம்மில் பலருக்கு தனியாக பேசிக்கொள்ளும் பழக்கம் இருக்கும். ஒரு நாளில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று இரவில் தூங்கும் போது அதனை சிந்தித்துப் பார்ப்போம். பின்னர் அது குறித்து ஆழ்ந்த யோசித்து தங்களிடம் பே... மேலும் பார்க்க