செய்திகள் :

India - America: ``பயங்கரவாதத்துக்கு எதிராக இருக்கும் பாகிஸ்தானின் நட்பும் தேவை'' - அமெரிக்க தளபதி

post image

இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரசாரத்துக்கும், நடவடிக்கைக்கும் அமெரிக்கா துணை நிற்கும் என அமெரிக்க தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்க நேரப்படி செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், ``கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்து உரையாற்றினோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா வலுவான ஆதரவை உறுதிப்படுத்தினோம்.

Michael Kurilla
Michael Kurilla

அதே நேரம், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நட்புறவுக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது. ஆகஸ்ட் 26, 2021 அன்று அபே கேட்டில் தற்கொலைத் தாக்குதல் நடந்தது. 13 அமெரிக்க உறுப்பினர்களும், 160 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த ISKP (Islamic State-Khorasan Province) அமைப்பின் முகமது ஷரிபுல்லாவை கைது செய்து நாடு கடத்துவதற்கு எங்கள் பாகிஸ்தான் கூட்டாளிகளின் நடவடிக்கைகள்தான் காரணம்.

இது உலகளவில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் பாகிஸ்தானின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது.

எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் நட்புறவு பாராட்ட வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இருக்கிறது. இந்தியாவுடன் நட்பாக இருந்தால் பாகிஸ்தானுடன் நாம் நட்பு கொள்ள முடியாது என்பதை நான் நம்பவில்லை.

Michael Kurilla
Michael Kurilla

எனவே, இரு நாடுகளுடனான உறவின் நன்மைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்த அவரது திட்டங்கள் குறித்து என்னால் பேச முடியாது. என்றாலும், உலகம் அவரது இயல்பை அறிந்திருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைத்தால் அது நல்லவிஷயம்தான்." என்றார்.

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க

``ஈபிஎஸ் சுயமாக சிந்திக்கக்கூடியவர், பாஜக உடன் இறுதிவரை இருப்பாரா?'' - சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நே... மேலும் பார்க்க

``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்

பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் பேசிவருவதாவது...'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வ... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த... மேலும் பார்க்க