செய்திகள் :

Jaishankar: 'துல்லியமான பதிலடி' - உலக நாடுகளின் பிரதிநிதிகளுடன் உரையாடிய ஜெய்சங்கர்

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துவரும் சூழலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கர் உடனான உரையாடல் குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "செயலாளர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் உரையாற்றினார்.

மோதல் தீவிரமடைவதை உடனடியாக தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ரூபியோ

இந்தியா பாகிஸ்தான் இடையே நேரடி உரையாடலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகவும், நாடுகளுக்கிடையிலான தொடர்பை மேம்படுத்த ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்காக மீண்டும் இரங்கல் தெரிவித்தார். தீவிரவாததுக்கு எதிரான சண்டையில் இந்தியாவுடன் அமெரிக்கா நிற்பதை உறுதிப்படுத்தினார்." எனக் கூறப்பட்டுள்ளது.

Jaishankar எக்ஸ் தள பதிவில், அமெரிக்கா தீவிரவாததுக்கு எதிரான சண்டையில் துணை நிற்பதைப் பாராட்டினார். மேலும், எல்லைதாண்டிய தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பதிலடிகள் துல்லியமானவை மற்றும் அளந்து மேற்கொள்ளப்பட்டவை என்பதை அமெரிக்காவுக்குச் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மோதலை தீவிரப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் இந்தியா எதிர்க்கிறது என்றும் தெரிவுபடுத்தியுள்ளார்.

இதேப்போல இத்தாலி துணை பிரதமர் அண்டோனியோ டஜானியுடனும் உரையாற்றியுள்ளார் ஜெய்சங்கர்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும்பாதுகாப்பு கொள்கைகளுக்கான உயர் பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணையத்தின் துணை தலைவருமான கஜா கல்லஸ் உடனும் பேசியுள்ளார்.

நேற்றைய தினம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளார் ஜெய்சங்கர். சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த மே 7ம் தேதி, ஜெர்மனி, பிரான்ஸ், கத்தார், ஜப்பன், ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேசியுள்ளார்.

முன்னதாக ஸ்லோவேனியா, லாத்வியா ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த பிரநிதிகளுடம் உரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதிநிதிகளுடன் பாகிஸ்தான் பிரச்னைப் பற்றி உரையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NCP : `அஜித் பவார் - சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ - அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியை இரண்டாக உடைத்ததோடு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறி கட்சியையும், சின... மேலும் பார்க்க

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் - செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."அன்பிற்குரிய 'தி வயர்' வாசகர்களுக்கு,இந்திய அர... மேலும் பார்க்க

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி - போர் பதட்டமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

"கடவுளே... நாட்டை காப்பாற்றுங்கள்" - பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா. 'இதற... மேலும் பார்க்க

India - Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா - பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிர... மேலும் பார்க்க

'போர் எளிய மக்களின் உயிரை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது'- எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாது... மேலும் பார்க்க